பதிவு செய்த நாள்
21 ஜூன்2012
00:23
மும்பை:கடந்த மே மாதத்தில், உள்நாட்டில் சிமென்ட் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.63 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1.42 கோடி டன்னாக இருந்தது என சிமென்ட் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள்:நாட்டின் மேற்கு மாநிலங்களில், பருவமழைக்கு முன்பாக, கட்டுமானப் பணிகள் அதிகளவில் மேற்கொண்டதையடுத்து, சிமென்ட் விற்பனை உயர்ந்துள்ளது. சென்ற மே மாதத்தில், சிமென்ட் உற்பத்தி, 1.62 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில் இருந்த உற்பத்தியைவிட, 14 சதவீதம் (1.43 கோடி டன்) அதிகமாகும்.
உள்நாட்டில் உள்ள சிமென்ட் ஆலைகள், சென்ற மே மாதத்தில், 79 சதவீத உற்பத்தி திறனில் செயல்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில், 74 சதவீதம் என்றளவில் இருந்தது.தென் மாநிலங்களில் (ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா) சிமென்ட் பயன்பாடு, 67 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 61 சதவீதமாக இருந்தது.
வட மாநிலங்கள்:அதேசமயம், வட மாநிலங்களில்(டில்லி, உத்தரகண்ட், ஹரியானா, பஞ்சாப்,ராஜஸ்தான் மற் றும் இமாசலப் பிரதேசம்) இதன் பயன்பாடு, இதே மாதங்களில், 74 சதவீதத்திலிருந்து, 89 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் சிமென்ட் நிறுவனம், அதன் உற்பத்தித் திறனை, கூடுதலாக 7 லட்சம் டன் அதிகரித்தது. இதையடுத்து, இந்திய சிமென்ட் ஆலைகளின் ஒட்டு மொத்த உற்பத்தித் திறன், 30.76 கோடி டன்னாக அதிகரித் துள்ளது.
விற்பனை:நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்,மே), நாட்டின் சிமென்ட் விற்பனை 11 சதவீதம் அதிகரித்து, 3.18 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே காலத்தில், விற்பனை 2.86 கோடி டன்னாக இருந்தது. இதே மாதங்களில், சிமென்ட் உற்பத்தி, 12 சதவீதம் அதிகரித்து, 2.89 கோடி டன்னிலிருந்து, 3.22 கோடி டன்னாக உயர்ந்துள்ளது என, இச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|