பதிவு செய்த நாள்
21 ஜூன்2012
10:25
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.04 புள்ளிகள் குறைந்து 16853.59 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.10 புள்ளிகள் குறைந்து 5106.45 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. அமெரிக்க மத்திய வங்கி நிதி ஆய்வுக் கூட்டத்தில்,அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கடன் பத்திரங்களை திரும்ப பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் வர்த்தகம் சிறப்பாக உயர்ந்துள்ளது என்ற, செய்தி வெளியானது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதனால், மதியத்திற்கு பிறகு இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஓர் அளவிற்கு முன்னேற்றம்கண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|