அன்னிய நேரடி முதலீடுரூ.9,285 கோடியாக குறைவுஅன்னிய நேரடி முதலீடுரூ.9,285 கோடியாக குறைவு ... தொடர் சரிவில் இந்திய ரூபாய்: ரூ.57-ஐ நெருங்குகிறது தொடர் சரிவில் இந்திய ரூபாய்: ரூ.57-ஐ நெருங்குகிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூ.25 லட்சமாக உயர்ந்தது வீட்டுக்கடன் உச்சவரம்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2012
12:31

சென்னை : அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக பெறும் முன்பணத்தொகை உச்சவரம்பு, 15 லட்சத்திலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், தற்போது அரசு ஊழியர்கள் சொந்தமாக வீடு கட்டும்போது, அதற்காக குறைந்த வட்டியில், எளிய தவணையில் செலுத்தும் வகையில் முன்பணம் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இப்போதைய நிலையில், அரசு ஊழியர்களுக்கு, ஆறு முதல் 15 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதேபோல், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய பணி அதிகாரிகளுக்கு, 7.5லிருந்து 25 லட்ச ரூபாய் வரை, இக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இத்தொகை வீடு கட்ட போதுமானதாக இல்லை. எனவே, இதற்கான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டுமென, அரசு ஊழியர்கள் தரப்பில், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
அரசு அறிவிப்பு : இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கான வீட்டுக்கடன் முன்பணத்தொகைக்கான உச்சவரம்பு, 15லிருந்து 25 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், நடப்பு நிதி ஆண்டின் வரவு-செலவு திட்டத்தில், 247 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக, நிர்வாக ரீதியான அரசாணையை, வீட்டுவசதித் துறை செயலர் பணிந்திர ரெட்டி நேற்று பிறப்பித்தார்.அரசாணை விவரம் : பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, அரசு ஊழியர்கள் வீடு கட்ட கடனாக பெறும், முன்பணத்தொகைக்கான உச்சவரம்பு, 15லிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், அகில இந்திய பணி பிரிவு அதிகாரிகளுக்கான உச்சவரம்பு, 25லிருந்து 40 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த உயர்வு, இந்த ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலாக்கப்படுகிறது. இது தொடர்பாக, ஏற்கனவே உள்ள நிபந்தனைகள் அப்படியே தொடரும். அதே சமயத்தில், நடப்பு நிதி ஆண்டில் இவ்வசதியை பெறுவோர் செலுத்த வேண்டிய வட்டி விகிதங்கள் குறித்து, நிதித்துறை மூலம் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)