பதிவு செய்த நாள்
21 ஜூன்2012
16:08
இந்தியாவில் கார் விற்பனையில் முதலிடத்தில் இருப்பது, மாருதி சுசூகி நிறுவனம். இதன் மாருதி 800 கார் தான், 20 லட்சம் கார்கள் விற்பனை என்ற சாதனையை முதலில் நிகழ்த்தியது. தற்போது அந்த சாதனையை, அதே நிறுவனத்தின் ஆல்டோ கார் நிகழ்த்தியுள்ளது.
இந்தியாவில் ஆல்டோ கார் அறிமுகப்படுத்தி, 11 ஆண்டுகள், 9 மாதங்களுக்கு பிறகு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது, மாருதி 800 கார் சாதனையை விட அதி விரைவில் நிகழ்த்தப்பட்டதாக, நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி 800 கார், 2010ம் ஆண்டு செப்டம்பருக்கு பிறகு, இந்தியாவில் 13 நகரங்களில் தான் விற்பனையாகிறது. ஆனால், ஆல்டோ கார், இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் சக்கை போடு போடுகிறது. மாதம் 20,000 கார்கள் விற்பனை என்ற பெருமையுடன், தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 2010-11ம் ஆண்டிலும், தொடர்ந்து 2011 -12ம் ஆண்டிலும், மாதத்துக்கு 30,000 கார்கள் விற்பனை என்ற சாதனையையும் இந்த கார் நிகழ்த்தியுள்ளது.
கே10 இன்ஜின் பொருத்தப்பட்ட ஆல்டோ கார், 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே கால கட்டத்தில், சி.என்.ஜி.,யில் இயங்கும் ஆல்டோ காரும் விற்பனைக்கு வந்தது. எனினும், தற்போதைய பெட்ரோல் விலை உயர்வால், ஆல்டோ கார் விற்பனையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|