வழக்கறிஞர்களுக்கு சேவைவரியில் இருந்து விலக்குவழக்கறிஞர்களுக்கு சேவைவரியில் இருந்து விலக்கு ... உள்நாட்டில் அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.78 கோடியாக வளர்ச்சி உள்நாட்டில் அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.78 கோடியாக வளர்ச்சி ...
இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குசர்வதேச அளவில் அலுமினியம் விலை கடும் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
03:34

மாஸ்கோ:சர்வதேச விளைபொருள் முன்பேர சந்தையில், அலுமினியம் விலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. சென்ற திங்களன்று நடைபெற்ற வர்த்தகத்தில், ஒரு டன் அலுமினியம் விலை 1,915 டாலராக குறைந்தது. இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலையாகும். எனினும், வர்த்தகத்தின் முடிவில், ஒரு டன் அலுமினியம் விலை,1,930 டாலராக சற்றே உயர்ந்தது.
தேவை குறைந்தது:சர்வதேச பொருளாதார நெருக்கடியாலும், மக்களின் செலவிடும் வருவாய் குறைந்துள்ளதாலும், அலுமினியம் மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான தேவை சரிவடைந்து வருகிறது. குறிப்பாக, கார் உதிரிபாகங்கள், விமானங்கள், குளிர்பான குடுவைகள் போன்றவை தயாரிக்கப் பயன்படும் அலுமினியத்திற்கான தேவை, கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குறைந்துள்ளது.
அதே சமயம், இதே காலத்தில் அலுமினியம் உற்பத்தி, ஒரே சீராக இருந்ததால், சர்வதேச சந்தையில் அலுமினியப் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக அலுமினியம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
ரஷ்யா:உலகளவில், அலுமினிய உற்பத்தியில் ரஷ்யாவின் ரசல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், சரிந்துவரும் அலுமினியத்தின் விலையைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், அதன் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ரசல் நிறுவனத்தின் பங்கு மற்றும் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் ஓலெக் முகாமெடிசின் கூறும்போது, "தற்போதைய சந்தை விலை, 30 சதவீத அலுமினிய உற்பத்தியாளர்களுக்கு லாபம் அளிக்கக் கூடியதாக இல்லை. பல நிறுவனங்கள், அவற்றின் முதலீடு மற்றும் விரிவாக்கத் திட்டங்களைக் குறைத்துக் கொண்டுள்ளன. இதனால் அலுமினியத் துறையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது' என்றார். ரசல் நிறுவனம், அதன் அலுமினிய உற்பத்தியில் 2.5 - 3 லட்சம் டன் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.சீனா நீங்கலாக, இதர சர்வதேச நிறுவனங்கள், சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் முதல், அவற்றின் அலுமினிய உற்பத்தியில் 13 லட்சம் டன் வரை குறைத்துள்ளன.
அதே போன்று, சீனாவும், லாபமற்ற அலுமினிய உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என ஓலக் மேலும் கூறினார். ஆனால், சீனா இதற்கு நேர்மாறாக, உள்நாட்டு அலுமினிய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சீனாவில் உள்ள ஹெனன் மாகாணத்தில் தான் அதிக அளவில் அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. இங்கு, அலுமினிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இழப்பைச் சந்தித்து வரும் தொழிற்சாலைகளின் மின் பயன்பாட்டிற்கு மானியம் வழங்கப்படுகிறது. உலகளவிலான அலுமினியம் உற்பத்தியில், சீனாவின் பங்களிப்பு 45 சதவீதம் என்ற அளவில் உள்ளது.சீனா :நடப்பாண்டில், சீனா 2.20 கோடி டன் அலுமினியம் உற்பத்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 60-70 லட்சம் டன் அளவிலான அலுமினிய உற்பத்தி, லாபமற்றது என, ரசல் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இவ்வகையில், இதர சர்வதேச நிறுவனங்களின் லாபம் அளிக்காத அலுமினிய உற்பத்தி 30 லட்சம் டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சீனா, சென்ற ஆண்டு, அதன் ஒட்டுமொத்த அலுமினிய உற்பத்தியில், 17 லட்சம் டன்னை குறைத்தது. ஆனால், நடப்பாண்டில் இது போன்ற உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என, ஓலக் தெரிவித்துள்ளார்.எனினும், சீனா நீங்கலாக, இதர நாடுகளின் அலுமினிய உற்பத்தி குறைந்துள்ளதால், நடப்பாண்டு ஒரு டன் அலுமினியம் விலை 2,200 டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சீன நிறுவனங்களும், அலுமினியம் உற்பத்தியைக் குறைக்கும்பட்சத்தில், அதன் விலை, வரும் 2013ம் ஆண்டில், 2,500-2,600 டாலராக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ரசல் நிறுவனம், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், ஒரு டன் அலுமினியம் விலையை 1,950 டாலராக குறைத்தது. மேலும், அதன் டாய்ஷெட் தொழிற்சாலையின் உற்பத்தியை, வரும் 2013ம் ஆண்டிற்கு தள்ளிவைத்துள்ளது. இத்தொழிற்சாலை செயல்:படத் தொடங்கும்பட்சத்தில், ரசல் நிறுவனத்தின் அலுமினியம் உற்பத்தித் திறன், ஆண்டுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டன்னாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)