இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குசர்வதேச அளவில் அலுமினியம் விலை கடும் வீழ்ச்சிஇரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குசர்வதேச அளவில் அலுமினியம் விலை கடும் ... ... அள்ளித்தந்தது தங்கம்... அதிர்ச்சியளித்தது வெள்ளி... அள்ளித்தந்தது தங்கம்... அதிர்ச்சியளித்தது வெள்ளி... ...
உள்நாட்டில் அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.78 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2012
03:35

புதுடில்லி:சென்ற மே மாதம், ஜி.எஸ்.எம்.தொழில்நுட்பத்திலான, அலைபேசி சேவையை, பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 73 லட்சம் அதிகரித்துள்ளது. மொத்த எண்ணிக்கை:இதன் மூலம், நாட்டில் இச்சேவையை பெற்றுள்ள மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 67 கோடியே 78 லட்சமாக உயர்ந்துள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில், தொலைத்தொடர்பு சேவையில், ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம். என இருவகை தொழில்நுட்பத்தில், அலைபேசி சேவையை வழங்கி வருகின்றன.நாட்டின் மொத்த அலைபேசி சேவையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், சென்ற மே மாதத்தில், மிகவும் அதிகபட்சமாக, 20 லட்சத்து 10 ஆயிரம், புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின், மொத்த அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை, 18 கோடியே 50 லட்சமாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த 'ஐடியா செல்லுலார் நிறுவனம்', 18 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டது. இதையடுத்து, இந்நிறுவனத்தின், மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது.
யூனிநார் இந்தியா :சென்ற, பிப்ரவரியில், 2ஜி அலைக்கற்றை முறைகேடாக ஒதுக்கப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், 122 தொலை தொடர்பு உரிமங்களை ரத்து செய்தது. இதில், யூனிநார் இந்தியா நிறுவனத்தின், 22 தொலைத்தொடர்பு உரிமங்களும் அடங்கும். இருப்பினும், சென்ற மே மாதத்தில், இந்நிறுவனத்தின், வாடிக்கையாளர் எண்ணிக்கை, 15 லட்சம் உயர்ந்து, 4 கோடியே 50 லட்சமாக அதிகரித்துள்ளது.
வோடபோன் இந்தியா நிறுவனம், 12 லட்சம், புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 15 கோடியே 20 லட்சமாக அதிகரித்துள்ளது. ஏர்செல் :ஏர்செல் நிறுவனம், 80 ஆயிரம், புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின், மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 6 கோடியே 40 லட்சமாக உயர்ந்துள்ளது.
சிஸ்டெமா ஷியாம் டெலிசர்வீசஸ் நிறுவனம், "எம்.டி.எஸ்.' என்ற பெயரில், அலைபேசி சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், சென்ற மே மாதத்தில், 2 லட்சத்து 55 ஆயிரத்து 995 புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 1 கோடியே 63 லட்சமாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)