பதிவு செய்த நாள்
22 ஜூன்2012
10:45
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 129.23 புள்ளிகள் குறைந்து 16903.33 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 34.35 புள்ளிகள் குறைந்து 5130.65 புள்ளிகளோடு காணப் பட்டது.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததினாலேயே இன்றைய வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது. நாட்டின், பங்கு வியாபாரம் நேற்று அதிக, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மதியம் வரையில், சுணக்கமாக இருந்த பங்கு வர்த்தகம், கடைசி, ஒரு மணி நேரத்தில் சூடுபிடித்தது. பல, முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை, சாதகமாகப் பயன்படுத்தி, முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை வாங்கினர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|