பதிவு செய்த நாள்
23 ஜூன்2012
00:42
பெங்களூரு:கடந்த 2011-12ம் நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், 91 ஒப்பந்தங்கள் வாயிலாக இந்தியாவில் மேற்கொண்ட முதலீடு, 180 கோடி டாலராக (9,000 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, பி.டபிள்யூ.சி.மணி ட்ரீ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், நிலவி வரும் பொருளாதார சுணக்க நிலையையும் விஞ்சி, அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொள்ளும் தனியார் பங்கு முதலீடு அதிகரித்துள்ளது என்றாலும், கணக்கீட்டு காலத்தில், எண்ணிக்கை அடிப்படையில், இந்த முதலீடு, 24 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், மதிப்பின் அடிப்படையில், இந்த முதலீடு, 57 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டு, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 120 நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட பங்கு முதலீடு, 110 கோடி டாலராக (5,500 கோடி ரூபாய்) இருந்தது.
இந்தியாவில், மேற்கொள்ளப்பட்ட மொத்த தனியார் பங்கு முதலீட்டில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவை துறையில், 35 நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, 26.30 கோடி டாலராக (1,315 கோடி ரூபாய்) இருந்தது.டிசம்பர் மாத காலாண்டை விட, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட முதலீடு, மதிப்பின் அடிப்படையில், 13 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், எண்ணிக்கை அடிப்படையில், இது, 8 சதவீதம் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|