நாட்டின் தங்கம் இறக்குமதி ரூ.31,000 கோடி குறைவுநாட்டின் தங்கம் இறக்குமதி ரூ.31,000 கோடி குறைவு ... கடந்த 2011-12ம் நிதியாண்டில்...975 நிறுவனங்களின் டிவிடெண்டு ரூ.92,813 கோடியாக வளர்ச்சி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - கடந்த 2011-12ம் நிதியாண்டில்...975 நிறுவனங்களின் டிவிடெண்டு ரூ.92,813 கோடியாக ... ...
தனியார் பங்கு முதலீடு ரூ.9,000 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2012
00:42

பெங்களூரு:கடந்த 2011-12ம் நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், 91 ஒப்பந்தங்கள் வாயிலாக இந்தியாவில் மேற்கொண்ட முதலீடு, 180 கோடி டாலராக (9,000 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, பி.டபிள்யூ.சி.மணி ட்ரீ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், நிலவி வரும் பொருளாதார சுணக்க நிலையையும் விஞ்சி, அன்னிய நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொள்ளும் தனியார் பங்கு முதலீடு அதிகரித்துள்ளது என்றாலும், கணக்கீட்டு காலத்தில், எண்ணிக்கை அடிப்படையில், இந்த முதலீடு, 24 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், மதிப்பின் அடிப்படையில், இந்த முதலீடு, 57 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டு, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 120 நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்ட பங்கு முதலீடு, 110 கோடி டாலராக (5,500 கோடி ரூபாய்) இருந்தது.
இந்தியாவில், மேற்கொள்ளப்பட்ட மொத்த தனியார் பங்கு முதலீட்டில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவை துறையில், 35 நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, 26.30 கோடி டாலராக (1,315 கோடி ரூபாய்) இருந்தது.டிசம்பர் மாத காலாண்டை விட, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட முதலீடு, மதிப்பின் அடிப்படையில், 13 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், எண்ணிக்கை அடிப்படையில், இது, 8 சதவீதம் குறைவாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)