தனியார் பங்கு முதலீடு ரூ.9,000 கோடிதனியார் பங்கு முதலீடு ரூ.9,000 கோடி ... காஸ் சிலிண்டர் எப்போது வரும்? அறிந்து கொள்ள ஆன்-லைன் வசதி காஸ் சிலிண்டர் எப்போது வரும்? அறிந்து கொள்ள ஆன்-லைன் வசதி ...
கடந்த 2011-12ம் நிதியாண்டில்...975 நிறுவனங்களின் டிவிடெண்டு ரூ.92,813 கோடியாக வளர்ச்சி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2012
00:46

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை, உள்நாட்டில் தயாரிப்பு துறையில் உற்பத்தி குறைவு போன்றவற்றால், நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சி குறைந்துள்ள @பாதிலும், பல நிறுவனங்கள் அறிவித்துள்ள டிவிடெண்டு உயர்ந்துள்ளது.
பங்குதாரர்கள்:சென்ற 2011-12ம் நிதியாண்டிற்கு, 975 நிறுவனங்கள் அதன் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில், 592 நிறுவனங்கள் வழங்கும் டிவிöண்டு, ஒட்டு மொத்த அளவில் குறைந்துள்ளது.
அதேசமயம், சென்ற நிதியாண்டிற்கு, ஒட்டு மொத்த அளவில் நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டு, 92 ஆயிரத்து 813 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 82 ஆயிரத்து 592 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டு, சென்ற நிதியாண்டில், சராசரியாக 26.9 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 24.8 சதவீதம் என்றளவில் இருந்தது.டிவிடெண்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள, 975 நிறுவனங்களில், 592 நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டு குறைந்துள்ளது. மேற்கண்ட, 592 நிறுவனங்களில், 226 நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டு, முந்தைய ஆண்டு வழங்கியதை விட குறைந்துள்ளது. 360 நிறுவனங்கள், முந்தைய நிதி ஆண்டிற்கு வழங்கிய அதே அளவிற்கே, சென்ற நிதியாண்டிற்கும், டிவிடெண்டு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளன.
6 நிறுவனங்கள் டிவிடெண்டு எதுவும் வழங்கவில்லை.
மூலப் பொருட்கள்:சர்வதேச பொருளாதார சுணக்க நிலையின் தாக்கம், இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டையும் பாதித்துள்ளது. இதனால், சென்ற நிதியாண்டில், இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களின் லாப வளர்ச்சி குறைந்துள்ளது. குறிப்பாக, மூலப் பொருட்களின் விலை உயர்வு, இந்நிறுவனங்களின் லாபத்தை சரிவடையச் செய்துள்ளது.
பல நிறுவனங்கள், அவற்றின் எதிர்கால விரிவாக்க திட்டங்கள் மற்றும் நடைமுறை மூலதனத் தேவைக்கான நிதி ஆதாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, பங்குதாரர்களுக்கு வழங்கும் டிவிடெண்டு அளவை குறைத்துள்ளன.
நிகர லாபம் :சென்ற நிதியாண்டில், 592 நிறுவனங்களின் நிகர லாபம் 13 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், 383 நிறுவனங்களின் நிகர லாபம் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, இந்நிறுவனங்கள், சென்ற நிதியாண்டிற்கு, கூடுதலாக டிவிடெண்டு வழங்கியுள்ளன.
ஹீரோ மோட்டோகார்ப், இன்போசிஸ் மற்றும் டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஒரு சில பெரிய நிறுவனங்கள், முந்தைய நிதி ஆண்டிற்கு வழங்கியதை விட, சென்ற நிதியாண்டிற்கு குறைந்த அளவிற்கே டிவிடெண்டு அறிவித்துள்ளன.
எடுத்துக்காட்டாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு 899 கோடி ரூபாயை டிவிடெண்டிற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டிற்கு வழங்கப்பட்டதை விட, 50 சதவீதம் குறைவாகும்.
முந்தைய இரண்டு ஆண்டுகளில், இந்நிறுவனம், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, டிவிடெண்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. அதேசமயம், இந்நிறுவனம், இரண்டு தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவுகளுக்காக, 2,575 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.அதேசமயம், டெக் மகிந்திரா, கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எக்சைட் ஆகிய நிறுவனங்கள், முந்தைய ஆண்டிற்கு வழங்கி அளவிற்கே டிவிடெண்டு வழங்கியுள்ளன.
ஆனால், ரியல் எஸ்டேட், அடிப்படை கட்டுமான துறையைச் சேர்ந்த எச்.சி.சி., ஆர்பிட் கார்ப் மற்றும் அன்சால் பிராப்பர்டீஸ் ஆகிய நிறுவனங்களின் நிகர லாபம் குறைந்ததையடுத்து, இந்நிறுவனங்கள் டிவிடெண்டு வழங்கவில்லை.
பொதுத் துறை நிறுவனங்கள்சென்ற நிதியாண்டில், பல தனியார் துறை நிறுவனங்களின் செயல்பாடு, நன்கு இல்லாத நிலையில், பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடும், லாபமும் அதிகரித்துள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, பொதுத்துறையைச் சேர்ந்த 29 நிறுவனங்கள் (வங்கிகள் உள்பட) வழங்கிய டிவிடெண்டு 40 ஆயிரத்து 509 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில், வழங்கப்பட்ட டிவிடெண்டு தொகையை விட, 5,393 கோடி ரூபாய் அதிகமாகும். மொத்த பொதுத் துறை நிறுவனங்களுள், பொதுத் துறை வங்கிகள் வழங்கிய டிவிடெண்டு பங்களிப்பு 44 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி நிறுவனங்கள்:நிறுவனங்கள் அறிவித்துள்ள மொத்த டிவிடெண்டில், நிதித் துறை நிறுவனங்களின் பங்களிப்பு :20 சதவீதம் அல்லது 18 ஆயிரத்து 961 கோடி ரூபாயாகும்.
இதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுரங்கம், உலோகம் மற்றும் மின் துறை நிறுவனங்கள் அதிகளவில் டிவிடெண்டு வழங்கும் வகையில் (5,000 கோடி ரூபாய்க்கும் அதிகம்) அறிவிப்பு வெளியிட்டுள்ளன.கோல் இந்தியா, கிளன்மார்க், இங்கர்சால்-ரேண்ட், நவீன் புளோரின் இண்டர்நேஷனல், இமாமி, மணப்புரம் பைனான்ஸ், இந்துஸ்தான் ஸிங்க் ஆகிய நிறுவனங்கள் முந்தைய நிதியாண்டை விட, சென்ற நிதியாண்டிற்கு, இரண்டு மடங்கிற்கும் அதிகமாக டிவிடெண்டு வழங்குவதாக அறிவித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)