பதிவு செய்த நாள்
23 ஜூன்2012
10:00
நாட்டில் உள்ள, 14 கோடி சமையல் எரிவாயு நுகர்வோர்கள் வசதிக்காக, "எல்.பி.ஜி., இணையதளம்' என்ற புதிய "ஆன்-லைன்' வசதியை, மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், மூன்று எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து நேற்று துவக்கின. இப்புதிய வசதியை மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: இப்புதிய வசதி மூலம், சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாடு முறை குறித்த அனைத்து விளக்கங்களையும் அறிந்து கொள்ளலாம். முன்பதிவு நிலை, சிலிண்டர் மறு பதிவு செய்வதற்கான வழிமுறைகள், அதிகளவு சமையல் காஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், மானியம் போன்ற பல தகவல்களை நுகர்வோர் அறிய முடியும்.
தகவல்கள் பெறலாம்: மேலும், இதன் மூலம் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் போன்றவர்களது காஸ் பயன்பாடு குறித்தும் அறிய இயலும். இதில், நுகர்வோர் பெயர், எண், விற்பனையாளர் பெயர், முகவரி போன்ற தகவல்களையும் பெற முடியும். இதற்கான இணைய தள முகவரி: www.petroleum.nic.in இதுமட்டுமல்லாமல், மூன்று எண்ணெய் நிறுவனங்களில் இணைய தள முகவரி மூலமும் இத்தகவல்களை பெற இயலும். மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் வேண்டி புக்கிங் செய்தவர், சிலிண்டர் எப்போது கிடைக்கும், சிலிண்டருக்கான முன்பதிவு வரிசையை யாரும் மீறியுள்ளனரா அல்லது சிலிண்டர் வினியோகிக்கப்பட்டு, அது நமக்கு வராமல், வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு சென்றுள்ளதா என்ற தகவல்களையும் பெறலாம். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி மூலம், தங்களுக்கு தெரியாமலே, தங்கள் பெயரில் வேறு யாராவது சமையல் காஸ் சிலிண்டர் கேட்டு முன்பதிவு செய்துள்ளனரா என்ற விவரத்தையும் அறியலாம். இவ்வாறு அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|