பதிவு செய்த நாள்
23 ஜூன்2012
10:26
சிவகாசி : முதியோர் உதவிதொகை மணியார்டர் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதில் சிலருக்கு முறையாக கிடைப்பதில்லை. இதனிடையே உதவி தொகை 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. முறைகேடு நடக்க கூடாது என்பதற்காக, தொகையை வங்கி மூலம் பெற வசதி செய்யப்பட்டது. இதற்காக பயனாளிகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டது. முதியோர் உதவிதொகை, ஜூன் முதல் வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வங்கி பணியாளர்கள், உதவி தொகை பெறுவோரை தேடிச் சென்று, முழு தொகையினையும் வழங்கி வருகின்றனர். அதிகாரி ஒருவர் கூறுகையில்,""முன்பு ஒரு மணியார்டருக்கு ரூ.50 கமிஷனாக அரசால் தபால் துறைக்கு வழங்கப்பட்டது. ஆனால் வங்கி சேவையில் ஒரு பயனாளிக்கு ரூ.30 மட்டுமே செலவாகிறது. தற்போது குறைந்த அளவிலே போஸ்ட்மேன் மூலம் பணம் பட்டுவாடா நடக்கிறது. விரைவில் அனைவருக்கும் வங்கி மூலம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது,''என்றார் .
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|