வாடகை தராததால் கிங்பிஷரிடம் இருந்து 34 விமானங்கள் பறிப்புவாடகை தராததால் கிங்பிஷரிடம் இருந்து 34 விமானங்கள் பறிப்பு ... நடப்பு 2012ம் ஆண்டில் இதுவரையிலுமாக...நிறுவன கையகப்படுத்துதல் மதிப்பு 26 சதவீதம் சரிவு நடப்பு 2012ம் ஆண்டில் இதுவரையிலுமாக...நிறுவன கையகப்படுத்துதல் மதிப்பு 26 ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.8.80 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2012
00:21

புதுடில்லி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி, 16 ஆயிரம் கோடி டாலராக (8 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, இதே நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில், பாதி தொகையாகும் என, அசோசெம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி:நாட்டின் ஏற்றுமதி வருவாயில், தகவல் தொழில்நுட்பம் மற்றும், அது சார்ந்த சேவை துறைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது. அதுபோன்று, இறக்குமதியில், கச்சா எண்ணெய், தங்கம் மற்றும், வெள்ளி உலோகங்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது.சென்ற நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 30 ஆயிரம் கோடி டாலரை (16 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ) தாண்டியுள்ளது. அதுசமயம், இறக்குமதி, 48 ஆயிரத்து 500 கோடி டாலர் என்றளவில் அதிகரித்துள்ளது.
வர்த்தகபற்றாக்குறை:ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்ததையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 18 ஆயிரத்து 500 கோடி டாலராக (10 லட்சத்து 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது,கடந்த 2010- 11ம் நிதியாண்டில், 10 ஆயிரத்து 440 கோடி டாலர் (5 லட்சத்து 74 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) என்றள வில் இருந்தது.சென்ற நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 16 ஆயிரம் கோடி டாலராக (8 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி, உலோகங்களின் இறக்குமதி, 6,000 கோடி டாலர் (3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்) என்றளவில் உள்ளது.
சென்ற நிதியாண்டில், இந்தியாவின் மொத்த இறக்குமதி செலவினத்தில், கச்சா எண்ணெய்,தங்கம்,வெள்ளி ஆகியவற்றின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்து வருவதால், வர்த்தக மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
பங்களிப்பு:இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை குறையும் பட்சத் தில், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அசோசெம் தலைவர் ராஜ்குமார் தூத் கூறும்போது," ஐந்து ஆண்டுகளுக்கு முன், நாட்டின் இறக்குமதியில், கச்சா எண்ணெய் பங்களிப்பு, 40 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, சென்ற நிதியாண்டில், 53 சதவீதமாக அதிகரித்துள்ளது' என்றார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)