பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
04:18
மண்டபம்:ஆந்திராவின், "வண்ணமே' வகை இறால் வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இறால் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.பலத்த காற்றால் பல நாட்கள் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. காற்று சாதகமாக வீசி மீன்பிடிக்க கடலுக்கு சென்றாலும், இறால் அதிகம் கிடைப்பதில்லை. இந்நிலையில் ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டணி அமைத்து, இறால்களுக்கு குறைவான விலையை நிர்ணயம் செய்கின்றன. இதனால் மீனவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் ,ஒரு கிலோ(40 இறால்கள்) 650 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தடை காலம் முடிந்த பின், 550 ரூபாயாக குறைந்து, தற்போது 400 - 450 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.இது குறித்து வியாபாரி வில்சன் கூறியதாவது: இறால்களை கூவி, கூவி விற்கும் சூழல் உள்ளது. ஆந்திராவில் "வண்ணமே' என அழைக்கப்படும் வெள்ளை நிற இறால்கள் வரத்து அதிகம் உள்ளது. ஒரு கிலோ "வண்ணமே' விலை 100 ரூபாய். இதனால், ஏற்றுமதி கம்பெனிகள், தமிழக இறால்களை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, நாளொன்றுக்கு 30 வேன்களில் "வண்ணமே' இறால் கொண்டு வரப்படுகின்றன. இதன் போக்குவரத்து குறைந்தால்தான், நமது இறால்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|