பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
04:20
சென்னை:ஷேரான் பிளைவுட்ஸ் நிறுவனம், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு வகையான பிளைவுட் மரப்பலகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.கடந்த 1987ம் ஆண்டு சென்னைக்கு அருகே, ஷேரான் பிளைவுட்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை துவங்கப்பட்டது. இங்கு, மிகவும் தரமான உள் அலங்கார பயன்பாட்டிற்கான "பிரீ-லேமினேட்டட் பார்ட்டிக்கில் போர்டுகள்' மற்றும் "பிரீ-லேமினேட்டட் எம்.டீ.எப் போர்டுகள்' தயாரிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச் சூழலுக்கு உகந்த இந்த பிளைவுட்கள், தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இவை, பூச்சி, கரையான் போன்றவை துளையிட முடியாத வகையில், அதிக உறுதித் தன்மையுடன், பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. நிறுவனத்தின் பிளைவுட்டுகள் "கர்ஜன் ஹார்டுவுட்' எனப்படும் வன்மரம் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.நிறுவனத்தின் தயாரிப்புகள் சொகுசு வில்லாக்கள், நட்சத்திர ஹோட்டல்களில் மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. விசைப்படகுகளை தயாரிக்கவும் பயன்படுகிறது என, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஷ்ணு கிமானி தெரிவித்தார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|