பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
04:21
புதுடில்லி:இந்தியாவில், தொலைதொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய், சென்ற 2011-12ம் நிதியாண்டில், 1 லட்சத்து 13 ஆயிரத்து 188 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 1 லட்சத்து 14 ஆயிரத்து 133 கோடி ரூபாயாக இருந்தது.இது குறித்து வாய்ஸ் அண்டு டேட்டா நிறுவனம் 500 நிறுவனங்களிடம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் விவரம்:
கட்டமைப்பு சாதனங்கள்:தொலைதொடர்பு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாயில், கம்பியில்லா தொலைதொடர்புக்கான, அடிப்படை கட்டமைப்பு சாதனங்கள் பிரிவின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. அந்த வகையில் இவ்வகை சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய், சென்ற நிதியாண்டில் 55 ஆயிரத்து 333 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 5.06 சதவீதம் (58 ஆயிரத்து 285 கோடி ரூபாய்) குறைவாகும். அரசின் நிலையற்ற கொள்கையால், தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்கள் தடைபட்டுள்ளன. இதனால் தொலைதொடர்பு சாதனங்களில், இப்பிரிவின் வருவாய் குறைந்துள்ளது.
நோக்கியா நிறுவனம்:தொலைபேசி, அலைபேசி, "டேப்லெட் கம்ப்யூட்டர்' போன்ற சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் வருவாய் 0.33 சதவீதம் உயர்ந்து, 34 ஆயிரத்து 557 கோடியில் இருந்து 34 ஆயிரத்து 672 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதிக வருவாய் ஈட்டியதில், நோக்கியா முதலிடத்திலும், சாம்சங் இரண்டாவது இடத்திலும் உள்ளது.நிறுவனங்களுக்கான காணொளி சாதனங்கள், "மோடம்' உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வருவாய், 8.89 சதவீதம் உயர்ந்து, 23 ஆயிரத்து 183 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|