பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
04:23
புதுடில்லி:நடப்பாண்டு மே மாதத்தில், நாட்டின் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின், இதே மாதத்தில், 5.8 சதவீதம் என்றளவில் உயர்ந்து காணப்பட்டது என, மத்திய தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிமென்ட்:நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை முக்கிய 8 தொழில்கள் பிரிவில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் தொழில்றை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், இத்துறைகளின் பங்களிப்பு, 37.9 சதவீதம் என்றளவில் உள்ளது.மே மாதத்தில், நிலக்கரி துறை உற்பத்தி வளர்ச்சி, 8 சதவீதம் என்ற அளவிலிருந்து உயர்ந்துள்ளது.
இது, கடந்த ஆண்டு மே மாதத்தில், 1.3 சதவீதம் என்றளவில் இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி வளர்ச்சி, 9.8 சதவீதம் என்றளவில் இருந்து, 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு துறையின் உற்பத்தி, மைனஸ் 9.6 சதவீதம் என்றளவிலிருந்து, மைனஸ் 10.8 சதவீதம் என்றளவில் மேலும் பின்னடைவைக் கண்டுள்ளது.சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.5 சதவீதம் என்றளவிலிருந்து, 2.9 சதவீதமாக குறைந்துள்ளது.
உரம்:உரத்துறையின் உற்பத்தி, 7.3 சதவீதம் என்றளவிலிருந்து, மைனஸ் 15.1 சதவீதம் என்றளவில் பின்னடைவைக் கண்டுள்ளது.உருக்கு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 8 சதவீதம் என்றளவிலிருந்து, 4.9 சதவீதமாக குறைந்துள்ளது. சிமென்ட் துறையின் உற்பத்தி, மைனஸ் 1.2 சதவீதம் என்ற அளவில் இருந்து, 22.1 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. மின் உற்பத்தித் துறையின் வளர்ச்சி, 10.3 சதவீதம் என்றளவில் இருந்து, 5.2 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|