பதிவு செய்த நாள்
01 ஜூலை2012
02:32
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பகுதியில், வெற்றிலை விளைச்சல் அதிகரித்துள்ளதால், அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெரியமுத்தூர், சின்னமுத்தூர், சிந்தகம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தில், ஒருசில பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து, பெரியமுத்தூரை சேர்ந்த வெற்றிலை விவசாயி சீனிராஜ் கூறியது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வெற்றிலை சாகுபடி பரப்பளவு 75 ஏக்கராக குறைந்துள்ளது. கோடையில், வெற்றிலை வரத்து அதிகமாக இருக்கும். அதனால் அதன் விலை குறைந்திருக்கும். நடப்பாண்டு, கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால், வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் வெற்றிலை வரத்து அதிகரித்து, அதன் விலை குறைந்துள்ளது. இதனால் வெற்றிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, 100 வெள்ளை வெற்றிலைகள் கொண்ட ஒரு கட்டை, 15 ரூபாய்க்கும், கறுப்பு வெற்றிலையை, 20 ரூபாய்க்கும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மழை காலம் துவங்கும் போது, வெற்றிலை வரத்து குறைந்து, விலை உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|