பதிவு செய்த நாள்
01 ஜூலை2012
02:33
கோல்கட்டா:நடப்பாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான, நான்கு மாத காலத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 14 சதவீதம் குறைந்துள்ளதாக, இந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில், தேயிலை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அசாம், மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களிலும், கர்நாடகா, தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், அதிகளவு தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.
நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில், தேயிலை உற்பத்தி, 14.30 கோடி கிலோ என்றளவில் குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 14 சதவீதம் (16.80 கோடி கிலோ) குறைவாகும்.மதிப்பீட்டு காலத்தில், மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.
தென் மாநிலங்களிலும், இதன் உற்பத்தி, 11 சதவீதம் என்றளவில் குறைந்துள்ளது. இதனால் தான், ஒட்டுமொத்த அளவில், நாட்டின் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது.மேலும், கென்யா மற்றும் இலங்கையில் தேயிலை உற்பத்தி குறைந்ததை அடுத்து, சர்வதேச அளவிலும், இதன் உற்பத்தி, 12 சதவீதம் குறைந்துள்ளதாக, இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|