ஜனவரி - ஏப்ரல் மாதத்தில் தேயிலை உற்பத்தி 14 சதவீதம் சரிவுஜனவரி - ஏப்ரல் மாதத்தில் தேயிலை உற்பத்தி 14 சதவீதம் சரிவு ... உலகளவில் விலை குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய், தங்கம் இறக்குமதி செலவினம் குறையும்- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - உலகளவில் விலை குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய், தங்கம் இறக்குமதி செலவினம் ... ...
ரூபாய் மதிப்பு சரிவால் எண்ணெய், பருப்பு விலை கிடு கிடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2012
02:36

சேலம்,:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், பருப்பு, எண்ணெய் விலையில் உயர்வு ஏற்பட்டு உள்ளது.ம@லசியா:தமிழகத்துக்கு தேவையான பருப்பு, எண்ணெய், பாதம், பிஸ்தா ஆகியன வடமாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரும் நிலையில், வடமாநிலங்களுக்கு மலேசியா, தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளிலிருந்து விற்பனைக்கு வருகிறது.
ஜூன் மாதத்தில் மட்டும் துவரம் பருப்பு குவிண்டாலுக்கு, 1,200 ரூபாய் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மொத்த விலையில் கடந்த மாதம், 6,200 ரூபாய்க்கு விற்றது, நேற்று குவிண்டால், 7,400 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 5,800 ரூபாய்க்கு விற்றது, 7,000 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம் குவிண்டால், 5,500 ரூபாய்க்கு விற்றது, 6,500 ரூபாய்க்கு விற்கிறது.
மொத்த விலையில் ஏற்பட்ட உயர்வை அடுத்து, சில்லரை விலையில் ஒரு கிலோ, முதல் ரகம், 77 ரூபாயாகவும், இரண்டாம் ரகம், 74 ரூபாயாகவும், மூன்றாம் ரகம், 70 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
பருப்பு விலை உயர்வை தொடர்ந்து எண்ணெய் விலையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் சூரிய காந்தி எண்ணெய் லிட்டர், 78 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 83 ரூபாய்க்கு விற்கிறது. பாமாயில் எண்ணெய் விலையில் லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் வரை, லிட்டர், 59 ரூபாய்க்கு விற்றது, நேற்று லிட்டர், 62 ரூபாய்க்கு விற்கிறது. உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி எதிர்பார்த்த அளவு இல்லாததால், அதன் விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம்:சேலம் பருப்பு வியாபாரி குமரேசன் கூறியதாவது:பர்மாவில் இருந்து பருப்பை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், டாலர் மதிப்பு வீழ்ச்சியை காரணம் காட்டி, தொடர்ந்து பருப்பு விலையை அதிகரித்து வருகின்றனர். அவர்களுடன் சின்டிகெட் அமைத்துக் கொண்ட மகாராஷ்டிரா வியாபாரிகள், துவரையின் விற்பனையை நிறுத்தி விட்டனர்.
தமிழகத்தில் துவரம் பருப்பு விலை கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் குவின்டாலுக்கு, 1,200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தமிழக அரசு பொது வினியோக திட்டத்துக்கு, இன்னும் சில வாரங்களில் பருப்பை கொள்முதல் செய்யும் என்ற தகவல் பரவி வருகிறது. பருப்பை அரசு கொள்முதல் செய்யும் பட்சத்தில், இதன் விலை மேலும் உயரும். இவ்வாறு குமரேசன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)