பதிவு செய்த நாள்
01 ஜூலை2012
14:49
2011-12-ம் ஆண்டில் சவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 37 சதவீதம் உயர்ந்துள்ளது. தனியார் துறை வங்கியான சவுத் இந்தியன் வங்கி 2011-12ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ.292.56 கோடியாக இருந்த வங்கியின் நிகரலாபம் 2011-12ம் ஆண்டில் 37.29 சதவீதம் அதிகரித்து ரூ.401.66 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் வங்கியின் டெபாசிட்டும் 22.81 சதவீதம் உயர்ந்து ரூ.36ஆயிரத்து 501 கோடியாகவும், கடன் அளித்திருப்பது 33 சதவீதம் உயர்ந்து 27 ஆயிரத்து 473 கோடியாக உயர்ந்துள்ளது. சவுத் இந்தியன் வங்கி கடந்த நிதி ஆண்டில் வழங்கிய மொத்த கடனில் மொத்த வாராக் கடன் 0.97 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டில் 1.11 சதவீதமாக இருந்தது. நிகர வாரக் கடனும் 0.29 சதவீதத்திலிருந்து 0.28 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் நடப்பு நிதி ஆண்டில் மொத்த வணிகத்தை ரூ.78,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக வங்கியின் தலைவர் அமிதாபா குஹா தெரிவித்துள்ளார்.
2011-12ம் ஆண்டில் பங்கு ஒன்றுக்கு 60 சதவீதம் டிவிடெண்டு வழங்கவும் சவுத் இந்தியன் வங்கி முடிவு செய்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|