பதிவு செய்த நாள்
01 ஜூலை2012
15:26
புதுடில்லி : நாட்டில் வெங்காய உற்பத்தி அதிகரித்து உள்ளதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான கட்டுபாட்டை மத்திய அரசு முற்றிலும் நீக்கியுள்ளது. உள்நாட்டில் கடந்த மாதம் வெங்காய விலை அதிகரித்தது. இதனால் விவசாயிகள் ஓரளவு லாபம் அடைந்தனர். உள்நாட்டில் விலை உயர்ந்ததால் வெளிநாடுகளுக்கு வெங்காய நிறுவனங்களால் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை கட்டுப்பாடு ஜுலை 2-ந் தேதி வரை நீக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 2011-12-ஆம் நிதி ஆண்டில் உள்நாட்டில் வெங்காயம் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்து 1.51 கோடி டன்னிலிருந்து 1.57 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. மேலும் ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்து 13.40 லட்சம் டன்னிலிருந்து 15.48 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதிக்கான முழு கட்டுப்பாட்டையும் மத்திய அரசு தற்போது முற்றிலும் நீக்கியுள்ளது. இதன்மூலம் இனி வெங்காயத்தை தாராளமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|