பதிவு செய்த நாள்
04 ஜூலை2012
15:01
இந்தியாவில் வர்த்தக வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் இருப்பது, ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் சார்பில், பல ஆண்டுகளுக்கு முன், "கூர்க்கா' என்ற பெயரில், ஒரு "ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்- (எஸ்.யு.வி.,)' ஜீப் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆர்டர் பெயரில், இந்த வாகனம் தயாரித்து அளிக்கப்படும். நேரடி விற்பனை கிடையாது. கடந்த 2010ம் ஆண்டு வரை, இந்த வாகனம் கிடைத்து வந்தது. எனினும், 2011ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து, இந்த வாகனம் அடியோடு நின்று போய் விட்டது. வர்த்தக வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் தான், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கவனம் செலுத்தியது. மேலும், இந்த நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவு தான், ஜீப் விற்பனையையும் கவனித்து வந்தது. இது விற்பனைக்கு பிறகான சேவை வசதியில் சிக்கலை ஏற்படுத்தியது. இப்படி பல காரணங்களால், கூர்க்கா ஜீப் விற்பனை நின்று போனது.
தற்போது, இந்த பிரிவில், மாருதி ஜிப்ஸி மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் தார் ஜீப் தான் சக்கை போடு போடுகின்றன. இதில் மாருதி ஜிப்ஸி ஜீப், ஆர்டர் பேரில் உற்பத்தி செய்து தரப்படுகிறது. நேரடி விற்பனை இல்லை. மாறாக, மஹிந்திரா தார் ஜீப், டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. "ஆஃப் ரோடு வைக்கிள்' என்று அழைக்கப்படும், கரடு முரடான சாலைகளில் செல்லும் வாகனத்துக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, கூர்க்கா ஜீப்பை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர, ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக, இந்த நிறுவனத்தில், பயணிகள் வாகனத்துக்கென தனியாக ஒரு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் சார்பில், ஃபோர்ஸ் ஒன் என்ற பெயரில், ஒரு எஸ்.யு.வி., வாகனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. அடுத்தபடியாக, கூர்க்கா ஜீப்பும் வர உள்ளது. இந்த வாகனத்தில், 2.2 லிட்டர் டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. ஃபோர் வீல் டிரைவ் வசதியுடன், கூர்க்கா ஜீப் கிடைக்கலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|