பதிவு செய்த நாள்
04 ஜூலை2012
23:58
புதுடில்லி: நாட்டின் மருந்து துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு, 2,000 கோடி ரூபாயில், துணிகர முதலீட்டு நிதியத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளி அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.அவர் @மலும் கூறியதாவது:மருந்து துறை வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், திட்டங்கள் மற்றும் வியூகங்களை வகுப்பது தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளால், இந்திய மருந்து துறை பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதற்கு, அந்நாடுகளுடன் நடைபெறும் பரஸ்பர பேச்சுவார்த்தையின் போது, தீர்வு காணப்படும். பிரகாசமான வர்த்தக வாய்ப்பு கொண்ட மருந்து துறையின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு, அனைத்து வகையிலும் ஆதரவளிக்கும். இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|