ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால்  மந்தகதியில் ஆயத்த ஆடை துறை ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால் மந்தகதியில் ஆயத்த ஆடை துறை ... தமிழகத்தில் பெட்ரோலிய ரசாயனங்கள் மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தமிழகத்தில் பெட்ரோலிய ரசாயனங்கள் மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீடுகளை கைவிட்ட 22 நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2012
23:59

மும்பை: நடப்பு 2012 காலண்டர் ஆண்டில், "செபி' அனுமதி அளித்த பின்னரும், பங்கு வெளியீடு மேற்கொள்வதை, 22 நிறுவனங்கள் கைவிட்டுள்ளன. இவை, பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததாலும், பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காது என்பதாலும், இந்த முடிவை எடுத்துள்ளன."செபி' அனுமதி ரெய்டு அண்டு டெய்லர், டாட்டா ஆட்டோகாம்ப், மைக்ரோமேக்ஸ், எம்பசி பிராப்பர்டி, @ஜாயாலுக்காஸ், லோக்மத் மீடியா, வி.ஆர்.எல் லாஜிஸ்டிக்ஸ், அரவல்லி இன்ப்ராபவர், செமன்டிக் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட 22 நிறுவனங்கள், பங்கு வெளியீடு வாயிலாக, 8,392 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டிருந்தன. இதற்கு "செபி' அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், பங்குச் சந்தையின் சரிவால், இந்நிறுவனங்கள் அவற்றின் பங்கு வெளியீட்டு திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளன. இவற்றுள், ஒரு சில நிறுவனங்களுக்கு பங்கு வெளியீடு மேற்கொள்வதற்கான ஓராண்டு அனுமதி காலம், முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பட்டியலில், சம்வர்த்தனா மதர்சன், குட்வில் ஹாஸ்பிடல்ஸ், பிளாஸ்டீன், கேலக்ஸி சர்பகன்ட்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள், 2,000 கோடி ரூபாய் திரட்டுவதற்காக பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. ஆனால், இதற்கு முதலீட்டாளர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால், இந்நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை இடையிலேயே திரும்பப் பெற்றுக் கொண்டன.கடந்த 2011ம் ஆண்டு, இதே காலத்தில் 29 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டு திட்டங்களை திரும்பப் பெற்றன. சென்ற ஆண்டு முதல் தற்போது வரை பங்கு வெளியீட்டின் வாயிலாக, 48 ஆயிரத்து 502 கோடி ரூபாய் திரட்டவிருந்த 51 நிறுவனங்கள், அவற்றின் திட்டங்களை கைவிட்டுள்ளன.தயக்கம்சர்வதேச பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தையில் எழுச்சியில்லை. அதனால், மூலதனச் சந்தையில் புதிய பங்குவெளியீடுகளை மேற்கொள்ள நிறுவனங்கள் தயங்கி வருகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தே, புதிய பங்கு வெளியீடுகளுக்கு ஆதரவு கிடைக்கும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.


Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)