பதிவு செய்த நாள்
07 ஜூலை2012
16:47
ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில், உற்பத்தி குறைவால், பச்சை மிளகாய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.சேலம் மாவட்டம், ஆத்தூர், தலைவாசல், நரசிங்கபுரம், வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், கொளத்தூர், மேச்சேரி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, வத்தல குண்டு உள்ளிட்ட பகுதிகளில், குண்டு மற்றும் சன்ன ரக மிளகாய் அதிகளவில் பயிரிடப்படுகிறது.இதில், ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் விளைவிக்கப்படும், காரம் மிகுந்த சன்னர பச்சை மிளகாயை, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில், விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். சமையலுக்கு அதிகளவில் பயன்படும் பச்சை மிளகாயை, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, புதுச்சேரி போன்ற வெளி மாநில வியாபாரிகள், அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.சில மாதங்களாக, கடுமையான வெயில், காற்று வீசி வருகிறது. அதனால், பாசன வசதியின்றியும், வெயில், காற்றுக்கு மிளகாய் செடிகளில் பூக்கள் கருகி, உதிர்ந்து வருகிறது. அதனால், பச்சை மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது. விளைச்சல் குறைவால், பச்சை மிளகாய் விலை, வரலாறு காணத வகையில் உயர்ந்துள்ளது. தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில், பச்சை மிளகாய் கிலோ, 50 முதல் 60 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில், கிலோ, 70 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். வர மிளகாய் கிலோ, 50 ரூபாய் விற்கப்படும் நிலையில், பச்சை மிளகாய் கிலோ, 70 ரூபாய் வரை விற்பதால், நுகர்வோர் பாதிப்படைந்துள்ளனர்.ஆத்தூரை சேர்ந்த பச்சை மிளகாய் விவசாயிகள் கூறியதாவது:ஏக்கருக்கு, 9,000 மிளகாய் செடிகள் நடவு செய்தால், 60 நாட்களில் காய்கள் பிடிக்கத் துவங்கி விடுகிறது. தொடர்ந்து, ஆறு மாதங்கள் வரை, பச்சை மிளகாய் அறுவடை இருக்கும். ஏக்கருக்கு தினமும், 30 கிலோ வரையும், அறுவடை வரை, பத்து டன் வரை விளைச்சல் இருக்கும். தற்போது, கடுமையான வெயில் மற்றும் காற்று காரணமாக, செடிகள் முறித்துக் கொண்டும், பூக்கள் கருகி, உதிர்ந்து வருகிறது. அதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|