பதிவு செய்த நாள்
08 ஜூலை2012
01:33
பெங்களூரு:வரும் 2012-13ம் காபி பருவத்தில் (நவ.,-அக்.,), நாட்டின் காபி உற்பத்தி, 3.25 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, காபி வாரியம் தெரிவித்துள்ளது. நடப்பு காபி பருவத்தில், இதன் உற்பத்தி, 3.14 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், கர்நாடகாவின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இவை தவிர, புதிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள ஆந்திரா, ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களிலும் காபி உற்பத்தியாகிறது.சாதகமான பருவ நிலை, பரவலான மழை ஆகிய காரணங்களால், நடப்பு பருவத்தில், நாட்டின் காபி உற்பத்தி, 3.25 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், அரபிகா மற்றும் ரோபஸ்டா வகை காபியின் பங்களிப்பு முறையே, 1.04 மற்றும் 2.21 லட்சம் டன் என்றளவில் இருக்கும்.ஆக, வரும் பருவத்தில், நடப்பு பருவத்தை விட கூடுதலாக, 11,300 டன் காபி உற்பத்தியாகும் என தெரிகிறது.வரும் பருவத்தில், கர்நாடகாவின் காபி உற்பத்தி, 2.34 லட்சம் டன் என்றளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இதன் உற்பத்தி 65 ஆயிரம் டன்னாகவும், தமிழகத்தில் 17,440 டன்னாகவும், ஆந்திரா, ஒடிசா, வட கிழக்கு ஆகிய மாநிலங்களில் 8,000 டன்னாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|