இந்தியன் ஆயில் நிறுவனம்700 கோடி டாலர் வெளிநாட்டு கடன்இந்தியன் ஆயில் நிறுவனம்700 கோடி டாலர் வெளிநாட்டு கடன் ... ஸ்மார்ட் கார்டு மூலம் ரயிலில் பயணச்சீட்டு: 29 ரயில் நிலையங்களில் விரைவில் அறிமுகம் ஸ்மார்ட் கார்டு மூலம் ரயிலில் பயணச்சீட்டு: 29 ரயில் நிலையங்களில் விரைவில் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் காபி உற்பத்தி 3.25 லட்சம் டன்னாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2012
01:33

பெங்களூரு:வரும் 2012-13ம் காபி பருவத்தில் (நவ.,-அக்.,), நாட்டின் காபி உற்பத்தி, 3.25 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, காபி வாரியம் தெரிவித்துள்ளது. நடப்பு காபி பருவத்தில், இதன் உற்பத்தி, 3.14 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், கர்நாடகாவின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இவை தவிர, புதிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள ஆந்திரா, ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களிலும் காபி உற்பத்தியாகிறது.சாதகமான பருவ நிலை, பரவலான மழை ஆகிய காரணங்களால், நடப்பு பருவத்தில், நாட்டின் காபி உற்பத்தி, 3.25 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், அரபிகா மற்றும் ரோபஸ்டா வகை காபியின் பங்களிப்பு முறையே, 1.04 மற்றும் 2.21 லட்சம் டன் என்றளவில் இருக்கும்.ஆக, வரும் பருவத்தில், நடப்பு பருவத்தை விட கூடுதலாக, 11,300 டன் காபி உற்பத்தியாகும் என தெரிகிறது.வரும் பருவத்தில், கர்நாடகாவின் காபி உற்பத்தி, 2.34 லட்சம் டன் என்றளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இதன் உற்பத்தி 65 ஆயிரம் டன்னாகவும், தமிழகத்தில் 17,440 டன்னாகவும், ஆந்திரா, ஒடிசா, வட கிழக்கு ஆகிய மாநிலங்களில் 8,000 டன்னாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)