பதிவு செய்த நாள்
08 ஜூலை2012
16:43
சென்னை: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை கொண்டு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் மூலம், பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் வசதி, 29 நிலையங்களில் வரும், 15ம் தேதிக்குள்ளாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பஸ் கட்டண உயர்வால், சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பயணச்சீட்டு மையங்களில், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க கூடுதல் பயணச்சீட்டு மையங்களை திறக்க வேண்டும் என்ற, கோரிக்கை உள்ளது. மாற்று ஏற்பாடாக "ஸ்மார்ட் கார்டு' திட்டத்தில் மின்சார ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் மூலம், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை கொண்டு, பயணச்சீட்டு வழங்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முதலில், பெரம்பூர் ரயில் நிலையத்தில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பயணிகளிடையே அமோக வரவேற்பு உள்ளது. எனவே, மேலும், 28 நிலையங்களில் இந்த வசதி விரிவுபடுத்தப்படுகிறது. 28 ரயில் நிலையங்களில், 56 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. வரும், 15ம் தேதிக்குள்ளாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு தெற்கு ரயில்வே மூலம், சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது.
எங்கே கிடைக்கும்? சென்னை கடற்கரை, கோட்டை, பூங்கா, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், பல்லாவரம், குரோம்பேட்டை, சானடோரியம், தாம்பரம், பெருங்களத்தூர், திருமயிலை, வேளச்சேரி,சென்னை சென்ட்ரல், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், அரக்கோணம், திருவொற்றியூர், மீஞ்சூர், பொன்னேரி ஆகியவை அந்த நிலையங்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|