பதிவு செய்த நாள்
08 ஜூலை2012
16:44
அவனியாபுரம்: ""மதுரையில் விமானத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 11 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வருவாய் கடந்தாண்டை விட 31.07 சதவீதம் அதிகரித்தது,'' என, மாணிக்கம் தாகூர் எம்.பி., தெரிவித்தார்.
மதுரை விமான நிலைய வளர்ச்சி குறித்து ஆலோசனைக்குழு கூட்டம் எம்.பி., தலைமையில் நடந்தது. விமான நிலைய இயக்குனர் சங்கையா பாண்டியன், முதன்மை பாதுகாப்பு அதிகாரி கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு வர்த்தக சங்க மூத்த தலைவர் ரத்தினவேல் உட்பட பலர் பங்கேற்றனர். மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாவது: இந்தியாவில் பெரிய விமான நிலையங்கள் கூட மூடுவிழா கண்டு வருகிறது. மதுரையில் விமானத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்தாண்டு, இதுவரை ஐந்து லட்சத்து 11 ஆயிரத்து 737 பேர் விமானத்தை பயன்படுத்தினர். இதன் மூலம் வருவாய் 31.07 சதவீதம் அதிகரித்தது. மதுரையில் இருந்து கொச்சி, ஐதராபாத் உட்பட மற்ற நகரங்களை இணைக்கும் வகையில் ஏழு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, மதுரையில் இருந்து கொழும்பு, பெங்களூருக்கு விமானங்கள் விரைவில் இயக்கப்படவுள்ளன. இதன் மூலம் பத்து விமானங்கள் மதுரையில் இருந்து தினமும் இயக்கப்படும், என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|