பதிவு செய்த நாள்
09 ஜூலை2012
04:32
சேலம்:தமிழகத்தில் பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை குறைந்துள்ளது.மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு விளைச்சல் அதிகமாக உள்ளது.
இம்மாநிலத்திலிருந்து, தமிழகத்திற்கு பூண்டுகள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த மே மாதம் வரை அதிகரித்திருந்த பூண்டு விலை, ஜூன் மாதம் திடீரென குறைந்தது. சிறிய பூண்டு ஒரு குவிண்டால், 1,700 ரூபாயில் இருந்து, 1,200 ரூபாயாக குறைந்தது.ஒரு குவிண்டால் நடுத்தர அளவிலான பூண்டு, 2,100 ரூபாயில் இருந்து, 1,600 ரூபாயாக சரிவடைந்துள்ளது. பெரிய பூண்டு, 3,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாக குறைந்துள்ளது.
இது குறித்து சேலம், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பூண்டு மொத்த விற்பனையாளர் பாலசங்கர் கூறியதாவது:பூண்டு விலை, ஒரு குவிண்டாலுக்கு, 500 ரூபாய் வரை குறைந்து விட்டது. வெளிமாநிலங்களில் இந்தாண்டு பூண்டு விளைச்சல் அமோகமாக உள்ளதால், வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.மேலும், சிங்கப்பூர், மலேசியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பூண்டு ஏற்றுமதி குறைந்து விட்டது. இதுவும் பூண்டு விலை வீழ்ச்சிக்கு காரணம். இவ்வாறு பாலசங்கர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|