பதிவு செய்த நாள்
14 ஜூலை2012
00:06
சென்னை:எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், "உங்கள் இல்லம் 2012' என்ற வீட்டு வசதி கண்காட்சியை சென்னை ராணி மெய்யம்மை அரங்கில் நடத்தி வருகிறது.இது குறித்து இந்நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வி.கே.சர்மா கூறியதாவது:
சொந்த வீடு வாங்க விரும்புவோரின் கனவை நனவாக்கிடும் வகையில், இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில், 55க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து வகையான கட்டுமான திட்டங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில், அவரவர் "பட்ஜெட்'டுக்கு ஏற்ப வீடுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். வீட்டு வசதிக் கடனுக்கு, சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளையும் பெறலாம். வரும் 15ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், சிறப்பு நடைமுறைக் கட்டணத்துடன், வீட்டு வசதி கடனுக்கான ஒப்புதலையும் உடனடியாக பெறலாம்.சென்ற 2011-12ம் நிதியாண்டில், தமிழ்நாடு மற்றும் கேரளாவை உள்ளடக்கிய தென் பிராந்திய பகுதியில், 4,798 கோடி ரூபாய் வீட்டு வசதிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது, நிறுவனம் வழங்கிய ஒட்டு மொத்த கடனில், 28 சதவீதமாகும். நடப்பு நிதியாண்டில், 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வீட்டுவசதி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இதில், தென்பிராந்தியத்தில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு வி.கே.சர்மா கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|