பதிவு செய்த நாள்
14 ஜூலை2012
00:21
புதுடில்லி:நடப்பு காலண்டர் ஆண்டின், இரண்டாவது காலாண்டில் (ஏப்.,-ஜூன்), சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை, 8.75 கோடியாக சற்று குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (8.76 கோடி) 0.1 சதவீதம் குறைவாகும்.
சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை, தொடர்ந்து ஏழு மாதங்களாக, ஒற்றை இலக்க வளர்ச்சி கண்டு வந்த நிலையில், இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தனிநபர் கம்ப்யூட்டர் விற்பனை சிறப்பாக வளர்ச்சி கண்டு வந்தது. தற்போது, "லேப்-டாப், டேப்லெட், ஸ்மார்ட் போன்' போன்றவற்றின் வருகையால், தனிநபர் கம்ப்யூட்டர் பயன்பாடு குறைந்து போயுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், எச்.பி. நிறுவனத்தின், கம்ப்யூட்டர் விற்பனை, 1.30 கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம், 14.9 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு, கம்ப்யூட்டர் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
லெனோவா நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, 1.11 கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து, 1.28 கோடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 14.7 சதவீதம் என்றளவில் உள்ளது. ஏசர் நிறுவனத்தின் விற்பனை, 96.40 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 11 சதவீதம் என்றளவில் உள்ளது.
சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனையில், 10.7 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ள, டெல் நிறுவனத்தின் விற்பனை, 1.06 கோடியிலிருந்து, 93.40 லட்சமாக குறைந்துள்ளது. 7 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள, ஏசஸ் நிறுவனத்தின் விற்பனை, மிகவும் அதிகபட்சமாக, 38.6 சதவீதம் வளர்ச்சிகண்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், ஆசிய பசிபிக் பிராந்திய கம்ப்யூட்டர் விற்பனை, 2 சதவீதம் உயர்ந்து, 3.18 கோடியாக அதிகரித்துள்ளது என, கார்ட்னர் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|