பதிவு செய்த நாள்
14 ஜூலை2012
12:43
இந்தியாவில் புதிய கார்கள் விற்பனை ஒரு புறம் நடந்தாலும், பழைய கார்கள் விற்பனையும் முன்னேற்றம் கண்டு வருகிறது. பெரிய கார் நிறுவனங்கள், பழைய கார்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மாருதி சுசூகியின் மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனமும், மஹிந்திராவின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனமும் முன்னணியில் உள்ளன. பெட்ரோல் விலை உயர்வு, வாகன கடன்களுக்கான வட்டி உயர்வு ஆகிய காரணங்களால், புதிய கார்கள் விற்பனையில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, பழைய கார்கள் விற்பனை முன்னேற்றம் அடைந்து வருகின்றன. மாருதி ட்ரூ வேல்யூ நிறுவனம், 2011ம் ஆண்டில், 2.31 லட்சம் பழைய கார்களை விற்பனை செய்துள்ளது. நடப்பு ஆண்டில் இதை, 20 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. மஹிந்திராவின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டில், 34,000 பழைய கார்களை விற்பனை செய்துள்ளது. நடப்பு ஆண்டில், இதை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும், 25 லட்சம் பழைய கார்கள் விற்பனையாகின்றன. ஆனால், வெளிநாடுகளை ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவான எண்ணிக்கை தான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிதாக ஒரு கார் விற்பனையானால், அதற்கு இணையாக மூன்று பழைய கார்கள் விற்பனையாகின்றன. அந்த அளவுக்கு பழைய கார்கள் விற்பனை வெளிநாடுகளில் சக்கை போடு போடுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|