பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
00:57
மும்பை: வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம், யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனத்துடன் இணைந்து,வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய பணியாளர்களுக்காக 'மகாத்மா காந்தி பிரவாசி சுரக்ஷா யோஜனா' (எம்.ஜி.பி.எஸ்.ஒய்) என்ற சிறப்பு சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்கள், ஆண்டுக்கு 4,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம், அதன் பங்களிப்பாக, 900 ரூபாயை செலுத்தும். இவை, யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் மாதாந்திர வருவாய் திட்டத்தில் (வளர்ச்சி) முதலீடு செய்யப்படும்.இத்திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டு காலம் ஐந்தாண்டுகள் ஆகும். அதற்கு முன்பாகவே தாயகம் திரும்பும் இந்தியர்களும், தாங்கள் மேற்கொண்ட முதலீட்டிற்கான வருவாய் பலன்களை பெறலாம். இத்திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு 18 முதல் 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|