பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
00:58
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஜூலை 6ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 236 கோடி டாலர் (12,980 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,762 கோடி டாலராக (15,81,910 கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு 136 கோடி டாலர் (7,480 கோடி ரூபாய்) அதிகரித்து, 28,998 கோடி டாலராக (15,94,890 கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 232 கோடி டாலர் (12,760 கோடி ரூபாய்) அளவிற்கு குறைந்து போயுள்ளது.
இதன் காரணமாகவே, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு சரிவடைந்துள்ளதாக தெரிகிறது.அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட செலாவணிகளின் வெளிமதிப்பில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் தற்போது வரையிலுமாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 680 கோடி டாலர் (37,400 கோடி ரூபாய்) அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|