கடந்த 10 வர்த்தக தினங்களில் அன்னிய முதலீடு ரூ.7,300 கோடியாக உயர்வுகடந்த 10 வர்த்தக தினங்களில் அன்னிய முதலீடு ரூ.7,300 கோடியாக உயர்வு ... பொது வரி எதிர் தவிர்ப்பு சட்ட ஆய்வுக்கு தனி குழு பொது வரி எதிர் தவிர்ப்பு சட்ட ஆய்வுக்கு தனி குழு ...
கிங்பிஷர் நிறுவன பைலட்கள் "ஸ்டிரைக்': 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2012
13:06

புதுடில்லி: ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, கிங் பிஷர் விமான நிறுவன பைலட்கள், ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

கிங் பிஷர் விமான நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதை அடுத்து, இந்நிறுவனத்தில் பணிபுரியும் பைலட்கள் மற்றும் ஊழியர்களுக்கு, கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், பைலட்கள் உட்பட சில ஊழியர்கள், ஏற்கனவே ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இவர்களுடன், விமான நிறுவனம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படும் என, நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் வேலைக்குத் திரும்பினர். ஆனாலும், அறிவித்தபடி, நேற்று முன்தினம், குறிப்பிட்ட சிலருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து, சம்பளம் வழங்கப்படாத பைலட்கள் நேற்று முதல் திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் கிங் பிஷர் நிறுவனத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கிங் பிஷர் விமானங்களில் பயணம் செய்யவிருந்த, பெங்களூரு, டில்லி, மும்பையைச் சேர்ந்த பயணிகள் பாதிக்கப் பட்டனர்.

கிங் பிஷர் விமான நிறுவனச் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "குறிப்பிட்ட சில ஊழியர்கள், தங்களின் வங்கி கணக்குகளில் சம்பளத் தொகை போடப்படவில்லை என கூறி, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, 75 சதவீத ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)