பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
13:06
புதுடில்லி: ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, கிங் பிஷர் விமான நிறுவன பைலட்கள், ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கிங் பிஷர் விமான நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதை அடுத்து, இந்நிறுவனத்தில் பணிபுரியும் பைலட்கள் மற்றும் ஊழியர்களுக்கு, கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், பைலட்கள் உட்பட சில ஊழியர்கள், ஏற்கனவே ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இவர்களுடன், விமான நிறுவனம் சார்பில் பேச்சு நடத்தப்பட்டது. ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படும் என, நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் வேலைக்குத் திரும்பினர். ஆனாலும், அறிவித்தபடி, நேற்று முன்தினம், குறிப்பிட்ட சிலருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து, சம்பளம் வழங்கப்படாத பைலட்கள் நேற்று முதல் திடீரென ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் கிங் பிஷர் நிறுவனத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கிங் பிஷர் விமானங்களில் பயணம் செய்யவிருந்த, பெங்களூரு, டில்லி, மும்பையைச் சேர்ந்த பயணிகள் பாதிக்கப் பட்டனர்.
கிங் பிஷர் விமான நிறுவனச் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "குறிப்பிட்ட சில ஊழியர்கள், தங்களின் வங்கி கணக்குகளில் சம்பளத் தொகை போடப்படவில்லை என கூறி, ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, 75 சதவீத ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|