பதிவு செய்த நாள்
16 ஜூலை2012
23:49
புதுடில்லி: மூன்று மாதங்களுக்கு பிறகு, பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருளின் விலையை, 1.7 சதவீதம் உயர்த்தியுள்ளன.உள்நாட்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பீ.சி.எல்.,), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்.பி.சி.எல்.,) ஆகிய நிறுவனங்கள், விமான சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு எரிபொருளை சப்ளை செய்து வருகின்றன. இந்நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்துக்கு ஏற்ப, 15 தினங்களுக்கு ஒரு முறை, எரிபொருள் விலையை மாற்றி அமைக்கின்றன.இந்நிலையில், நேற்று விமான எரிபொருள் விலை, கிலோ லிட்டருக்கு (1,000 லிட்டர்), 1.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, டில்லியில், இதன் விலை, கிலோ லிட்டருக்கு 1,039 ரூபாய் உயர்ந்து, 62,208 ரூபாயாக அதிகரித்துள்ளது. மும்பையில், இதன் விலை, 61,933 ரூபாயிலிருந்து, 63,002 ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்டில், விமான எரிபொருள் விலை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, கிலோ லிட்டர், 71,028 ரூபாய் என்றளவில் இருந்தது. அதன் பிறகு, சென்ற மாதம், இதன் விலை, 61,169 ரூபாய் என்றளவில் குறைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|