பதிவு செய்த நாள்
16 ஜூலை2012
23:51
சேலம்: காலதாமதமாகிக் கொண்டிருந்த தென்மேற்கு பருவமழை, தற்போது எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில், காஞ்சிபுரம், வேலூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில், சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
பருவமழை :தொடர்ந்து, ஓரிரு மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் துவங்கி விடும். எந்த நேரத்தில், மழை வரும் என்று தெரியாத அளவில், மேகங்கள் இருண்டு வருகின்றன. இதனால், வீட்டை விட்டு வெளியில் செல்லும் மக்கள் குடை, தொப்பி, ரெயின்கோட் உள்ளிட்டவற்றை கையோடு எடுத்து செல்கின்றனர்.மழையில் இருந்து தப்பிக்கவும், உடலை பாதுகாக்கவும் உதவும் குடை, ரெயின்கோட் விற்பனை, அனைத்து மாவட்டங்களிலும் சூடு பிடித்துள்ளது. குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கென தனித்தனியாக குடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 90 ரூபாய் முதல், 250 ரூபாய் வரையில் குடை உள்ளது. அதேபோன்று, ரெயின்கோட், 200 ரூபாய் முதல், 800 ரூபாய் வரையில் உள்ளது. இவற்றை சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட நகர வீதிகளில், வெளிமாநில வியாபாரிகள் விற்பனை செய்து வருவதை காண முடிகிறது.சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள, ஒரு வியாபாரி கூறியதாவது:வெயில் காலத்தை விட, மழைக்காலத்தில் தான், குடை விற்பனை அதிகம் இருக்கும். விற்பனைதென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து, அழகிய குடைகளை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளோம். 100 ரூபாய் முதல், 250 ரூபாய் வரையில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள், குடைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். அடுத்த இரண்டு மாதங்களுக்கு, நன்கு விற்பனை இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|