விமான எரிபொருள் விலை  1.7 சதவீதம் அதிகரிப்பு விமான எரிபொருள் விலை 1.7 சதவீதம் அதிகரிப்பு ... அவந்தா பவர் நிறுவனம் ரூ.1,500 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம் அவந்தா பவர் நிறுவனம் ரூ.1,500 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம் ...
சூடு பிடிக்கும் குடை, "ரெயின் கோட்' விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2012
23:51

சேலம்: காலதாமதமாகிக் கொண்டிருந்த தென்மேற்கு பருவமழை, தற்போது எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில், காஞ்சிபுரம், வேலூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில், சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
பருவமழை :தொடர்ந்து, ஓரிரு மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் துவங்கி விடும். எந்த நேரத்தில், மழை வரும் என்று தெரியாத அளவில், மேகங்கள் இருண்டு வருகின்றன. இதனால், வீட்டை விட்டு வெளியில் செல்லும் மக்கள் குடை, தொப்பி, ரெயின்கோட் உள்ளிட்டவற்றை கையோடு எடுத்து செல்கின்றனர்.மழையில் இருந்து தப்பிக்கவும், உடலை பாதுகாக்கவும் உதவும் குடை, ரெயின்கோட் விற்பனை, அனைத்து மாவட்டங்களிலும் சூடு பிடித்துள்ளது. குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கென தனித்தனியாக குடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. 90 ரூபாய் முதல், 250 ரூபாய் வரையில் குடை உள்ளது. அதேபோன்று, ரெயின்கோட், 200 ரூபாய் முதல், 800 ரூபாய் வரையில் உள்ளது. இவற்றை சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட நகர வீதிகளில், வெளிமாநில வியாபாரிகள் விற்பனை செய்து வருவதை காண முடிகிறது.சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள, ஒரு வியாபாரி கூறியதாவது:வெயில் காலத்தை விட, மழைக்காலத்தில் தான், குடை விற்பனை அதிகம் இருக்கும். விற்பனைதென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து, அழகிய குடைகளை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளோம். 100 ரூபாய் முதல், 250 ரூபாய் வரையில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள், குடைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். அடுத்த இரண்டு மாதங்களுக்கு, நன்கு விற்பனை இருக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)