பதிவு செய்த நாள்
16 ஜூலை2012
23:52
ஈரோடு: தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை கிலோவுக்கு, 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.தேயிலை உற்பத்தியில் இந்தியாவில், அசாம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் நீலகிரி, பழனி மலை, ஏலமலை, அகத்தியர் மலை, மாஞ்சோலை மற்றும் ஏற்காடு பகுதிகளில் தேயிலை சாகுபடி அதிகம் நடக்கிறது. தேயிலை தளிர்களை பறித்து, காயவைத்து, அரவை மில்கள் மூலம் தூளாக்குகின்றனர். தேயிலைக்கான மொத்த வணிகச் சந்தை கொச்சியில் உள்ளது. அங்கிருந்து, தேயிலையை கொள்முதல் செய்யும் முன்னணி நிறுவனங்கள், தேயிலைத் தூளை பதப்படுத்தி, பல்வேறு பிராண்டுகளில், உலகளவிலும், உள்ளூர் முகவர்கள் மூலமும் சந்தைப்படுத்தப்படுகின்றன.பாதிப்பு அசாம் மலைப்பகுதியில், கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால், அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களுக்குள் தொழிலாளர்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பறித்த இலையை வெயிலில் காயவைக்க முடியவில்லை. தவிர, மலைகளில் ஏராளமான இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தேயிலை செடிகள் நாசமடைந்துள்ளன.சென்ற ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டு உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. தேயிலைத் தூள் அரவை ஆலைகளுக்கும், போதிய தேயிலை வரத்து இல்லை.செலவு : இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த தேயிலை முகவர் ரவி கூறியதாவது:அசாம், ஊட்டி, பழநி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் விளையும் தேயிலையை, கோவை, சென்னை, சேலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிறுவனங்கள் வாங்கி பதப்படுத்துகின்றன. இதை ஒரு கிலோ முதல் ஐந்து கிலோ வரை பாக்கெட் செய்து, உள்ளூரிலும், வெளிமாநிலங்களிலும் விற்பனை செய்கின்றன.பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின்தடை போன்ற காரணங்களால், தேயிலைத் தூள் தயாரிப்பிற்கு கூடுதல் செலவாகிறது. ஒரு கிலோ, 170 ரூபாய்க்கு விற்ற, தேயிலைத்தூள், தற்போது, 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக முன்னணி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு உயரும் பட்சத்தில், கடைகளில் தேநீர் விலையும் உயரும். இவ்வாறு ரவி கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|