பதிவு செய்த நாள்
16 ஜூலை2012
23:53
புதுடில்லி: மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அவந்தா பவர் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதன சந்தையிலிருந்து, 1,000-1,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.அவந்தா பவர் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம், பங்கு வெளியீட்டை மேற்கொள்வதாக இருந்தது. அப்போது, பங்கு சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டை ஒத்தி வைத்தது. இந்நிலையில், இந்நிறுவனம் தற்போது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளது.அவந்தா பவர் நிறுவனம், தற்போது, 191 மெகா வாட் அனல் மின் உற்பத்தி திட்டத்தை கொண்டுள்ளது. இந்நிறுவனம், 2,460 மெகா வாட் மின் உற்பத்திக்கான பல்வேறு மின் திட்டங்களை அமைத்து வருகிறது. இவைதவிர, கூடுதலாக, 1,320 மெகா வாட் மின் உற்பத்தி திட்டங்களையும் அமைக்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|