பதிவு செய்த நாள்
16 ஜூலை2012
23:54
புதுடில்லி,: இந்தியாவின் கறிக்கோழி உற்பத்தி, நடப்பாண்டில் 4.50 லட்சம் டன் உயர்ந்து 32 லட்சம் டன்னை தாண்டும் என, அமெரிக்க வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது.நாட்டில் கறிக்கோழிக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, அறிமுகப்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களால், கறிக்கோழி உற்பத்தியும் பெருகி வருகிறது.பயன்பாடுசென்ற 2008ம் ஆண்டு, நாட்டின் கறிக்கோழி உற்பத்தி 25 லட்சம் டன்னாகவும், அதன் பயன்பாடு 24.80 லட்சம் டன்னாகவும் இருந்தது. இது, 2009ம் ஆண்டு, முறையே, 25.50 லட்சம் டன் மற்றும் 25.40 லட்சம் டன்னாக அதிகரித்தது.கடந்த 2010ம் ஆண்டு, கறிக்கோழி உற்பத்தி 26.5 லட்சம் டன்னாகவும், அதன் பயன்பாடு 26.4 லட்சம் டன் என்ற அளவிலும் இருந்தது. இது, 2011ம் ஆண்டு, முறையே, 29 லட்சம் டன் மற்றும் 28.9 லட்சம் டன்னாக இருந்தது.நடப்பு 2012ம் ஆண்டில், இந்தியாவின் கறிக்கோழி உற்பத்தி 27.50 லட்சம் டன்னாகவும், பயன்பாடு 27.40 லட்சம் டன் என்ற அளவிலும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.இறைச்சிஇந்நிலையில், அதிகரித்து வரும் நடுத்தர வருவாய் பிரிவினரின் எண்ணிக்கை, பல்வேறு புதிய சுவைகளில் அறிமுகமாகும் கோழி இறைச்சி உணவு வகைகள் போன்றவற்றால், கறிக்கோழிகளுக்கான தேவை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, கோழிப்பண்ணைகளும் பெருகியுள்ளதால், கறிக்கோழி உற்பத்தி சாதனை படைக்கும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.இதையடுத்து, இந்தியாவின் கறிக்கோழி உற்பத்தி, 32 லட்சம் டன்னாகவும், நுகர்வு 31.90 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வேளாண் துறை தெரிவித்துள்ளது.நடப்பாண்டில், தீவனம் மற்றும் நடைமுறை செலவினம் அதிகரித்துள்ளதால், சர்வதேச கறிக்கோழி உற்பத்தி குறித்த மதிப்பீடு, 8.30 கோடி டன்னில் இருந்து 8.20 கோடி டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா மட்டுமே கறிக்கோழி உற்பத் தியில், மெக்சிகோவிற்கு சவால் விடும் வகையில் முன்னிலை பெறும் என மப்பிடப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சந்தை மதிப்புஇந்தியாவில், 47,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோழிப்பண்ணை சந்தையில், கறிக்கோழி சந்தை 15-18 சதவீதமும், முட்டை சந்தை 5-7 சதவீதமும் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.தேசிய அளவில், கோழி உற்பத்தியில் தென்னிந்தியா 45 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. தென்மாநிலங்களைப் பொறுத்தவரை. கோழி உற்பத்தியில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. கோழி உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள மேற்கு பிராந்தியத்தில், மகாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது.தமிழகம்கோழி மற்றும் முட்டைகள் பயன்பாட்டில், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழக பள்ளிகளில், இலவச மதிய உணவில் முட்டை வழங்கப்படுவதால், இது சாத்தியமாகியுள்ளது. ஒட்டுமொத்த அளவில், நாட்டில் முட்டை உற்பத்தியும், பயன்பாடும் அதிகரித்து வருகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கடந்த 2000-01ம் நிதியாண்டில், தேசிய அளவில் நாளொன்றுக்கு 98 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இது, 2010-11ம் நிதியாண்டில் 2.66 கோடியாக உயர்ந்துள்ளது.மூலப்பொருட்கள்இந்திய கோழிப்பண்ணை துறைக்கு, மூலப்பொருள் செலவினம் அதிகரித்து வருவது மிகப் பெரிய இடர்பாடாக உள்ளது. குறிப்பாக, கோழித் தீவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சோளம் விலை உயர்ந்துள்ளதால், உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு, ஒரு டன் சோயா புண்ணாக்கு விலை 16,200லிருந்து 16,300 ரூபாயாக இருந்தது. இது, தற்போது 38,200-38,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.எனினும், கோழி உணவு வகைகளுக்கான தேவை அதி கரித்து வருவதால், இத்துறை, இடர்பாடுகளை சமாளித்து, வளர்ச்சி கண்டு வருகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|