பதிவு செய்த நாள்
16 ஜூலை2012
23:55
மும்பை :நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. பருவமழை தாமதத்தால், அரிசி உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில் 4 சதவீத வேளாண் உற்பத்தி இலக்கை எட்டுவது கடினம் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.மேலும், நேற்று வெளியிடப்பட்ட ஜூன் மாதத்திற்கான பொதுப் பணவீக்க அறிவிப்பில், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் மிகவும் அதிகரித்துள்ளது என்ற செய்தி வெளியானது. இதையடுத்து, முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சரிவடைந்தது. ஆசியப் பங்குச் சந்தைகளை பொறுத்தமட்டில், வர்த்தகம் ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், உலோகம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, சரிவடைந்து போனது. இருப்பினும், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ்,ஓ.என்.ஜி.சி., மாருதி நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 110.39 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 17,103.31 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,282.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,079.63 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 30 புள்ளிகள் சரிவடைந்து, 5,197.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,246.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,190.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|