பதிவு செய்த நாள்
17 ஜூலை2012
15:01
உலகளவில் ஸ்பார்ட்ஸ் கார் விற்பனையில் முன்னணியில் இருப்பது, பெராரி கார் நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 1962ம் ஆண்டு முதல், 1964ம் ஆண்டு வரை, "பெராரி 250 ஜிடிஓ' என்ற மாடல் காரை உற்பத்தி செய்தது. மொத்தம், 30 கார்கள் மட்டுமே இந்த மாடலில் உருவாக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், இந்த காரின் விலை ரூ.4.8 லட்சம்( 6,000 பவுண்டுகள்). உலகளவில் பெரும் பணக்காரர்களே இந்த கார்களை வாங்கினர். அதில், 3445சிடி என்ற சேஸிஸ் எண் கொண்ட கார், 1962ம் ஆண்டு ஏப்ரலில் உருவாக்கப்பட்டது. இந்த கார், மணிக்கு, 174 கி.மீ., வேகத்தில் செல்ல கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து 60 கி.மீ., வேகத்தை, 6.1 வினாடிகளில் தொட்டு விடும் திறன் படைத்தது. இந்த காரில், 3 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
துவக்கத்தில் இந்த கார் சிவப்பு நிறமாகவே இருந்தது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரேஸ் கார் டிரைவர் உல்ஃப் நோரிந்தர் என்பவர், தனது நாட்டு பிரபலமான வண்ணத்துக்கு இணையாக இந்த காரின் வண்ணத்தையும் இளம் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்துக்கு மாற்றினார். 1976ம் ஆண்டு இந்த கார், விபத்தில் சிக்கி, காரின் மேற்புறத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 2005ம் ஆண்டு செல்வந்தர் கிறிஸ்டோபர் கோக் என்பவர் இந்த காரை விலைக்கு வாங்கினார். அப்போது இந்த காரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த மாடல் பெராரி கார், துவக்கத்தில் விலை குறைவாக இருந்தாலும், ஆண்டுகள் செல்ல செல்ல, காரின் விலை ராக்கெட் போல ஏறிக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க நடிகர் கிறிஸ் எவன்ஸ் என்பவர், இந்த மாடல் பெராரி காரை, ரூ.160 கோடி அளவுக்கு சமீபத்தில் விற்பனை செய்துள்ளார். செல்வந்தர் கிறிஸ்டோபர் கோக் வைத்துள்ள காரின் விலை ரூ.171 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன், ஃபிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில், "பெராரி 250 ஜிடிவோ' மாடல் கார்களின் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்டோபர் கோக் தனது காருடன் பங்கேற்றார். ரேஸ் கார் மைதானத்திலும், காரை வேகமாக ஓட்டினார். அதில் கார் திடீரென நிலைத்தடுமாறி, மிகப்பெரிய விபத்தில் சிக்கியது. கிறிஸ்டோபர் கோக்கும், அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர். ரூ.170 கோடிக்கு மேல் விலை கொண்ட கார் விபத்தில் சிக்கியது, சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|