பதிவு செய்த நாள்
17 ஜூலை2012
23:47
புதுடில்லி: நடப்பாண்டு, ஜனவரி முதல் மே வரையிலான, ஐந்து மாத காலத்தில், அலைபேசி வாயிலான பணப் பரிமாற்றம், ஐந்து மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.ஏர்டெல்அலைபேசி சேவையில் ஈடுபட்டு வரும், ஏர்டெல் நிறுவனம், அலைபேசி வாயிலாக பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்துவது மற்றும் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வசதிகளை வழங்கி வருகிறது. இதனால், மதிப்பீட்டு மாதங்களில், அலைபேசி வாயிலான பணப் பரிவர்த்தனை குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி, வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "ஜனவரி முதல் மே வரையிலான காலத்தில், அலைபேசி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனையின் மதிப்பு, 1,141 கோடி ரூபாயாக, சிறந்த அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டு, இதே மாதங்களில், 209 கோடி ரூபாயாகவும், 2010ம் ஆண்டு இதே மாதங்களில், 113 கோடி ரூபாயாகவும் இருந்தது. ஆக, சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான காலத்தில், அலைபேசி வாயிலான பரிவர்த்தனை, ஐந்து மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் துறைமதிப்பீட்டு மாதங்களில், அலைபேசி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை, எண்ணிக்கை அடிப்படையிலும் சிறப்பாக அதிகரித்துள்ளது. அம்மாதங்களில்,1.5 கோடி மதிப்பிற்கு அலைபேசி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, சென்ற ஆண்டு, இதே மாதங்களில், 50 லட்சமாக இருந்தது. பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த, 49 வங்கிகள் மூலமாக இந்த பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க்அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அலைபேசி பரிவர்த்தனையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கி, எண்ணிக்கை அடிப்படையிலான ஒட்டுமொத்த அலைபேசி பரிவர்த்தனையில், மூன்றில் இரண்டு பங்கை கொண்டுள்ளது. மேலும், மதிப்பின் அடிப்படையில் இதன் பங்களிப்பு 45.8 சதவீதம் என்றளவில் உள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ. @பங்க், அலைபேசி பணப் பரிவர்த்தனையில், மதிப்பின் அடிப்படையில் 34.1 சதவீதம் மற்றும் அளவின் அடிப்படையில் 8 சதவீத பங்களிப்பை கொண்டு, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சிட்டி பேங்க்-ஐ பொறுத்தவரை, இவை, முறையே 10.5 சதவீதம் மற்றும் 1.3 சதவீதமாக உள்ளன.சென்ற மே மாதத்தில், அலைபேசி வாயிலான பரிவர்த்தனை மதிப்பு, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, மூன்று மடங்கு உயர்ந்து, சாதனை அளவாக, 286.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அலைபேசி பணப் பரிவர்த்தனை எண்ணிக்கையும், 33 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|