பதிவு செய்த நாள்
17 ஜூலை2012
23:48
சென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான இந்தியன் பேங்க், சென்ற 2011-12ம் நிதியாண்டிற்கு, மத்திய அரசுக்கு, 297.87 கோடி ரூபாய் டிவிடெண்டு வழங்கியுள்ளது.இந்தியன் வங்கியின் 429.77 கோடி ரூபாய் பங்கு மூலதனத்தில், மத்திய அரசு, 343.82 கோடி ரூபாயை (80 சதவீதம்) மூலதனமாக கொண்டுள்ளது. இவ்வங்கி, சென்ற நிதியாண்டிற்கு, 75 சதவீத டிவிடெண்டு வழங்குவதாக அறிவித்திருந்தது. இவ்வகையில், இவ்வங்கி, 257.87 கோடி ரூபாயையும், வங்கியில் மத்திய அரசு கொண்டுள்ள முன்னுரிமை பங்கு மூலதனத்திற்கு, 40 கோடி ரூபாயையும் டிவிடெண்டாக வழங்கியுள்ளது.மேற்கண்ட இரண்டு டிவிடெண்டுகளுக்கான, இரு காசோலைகளை வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எம்.பாசின், மத்திய அரசின் நிதித் துறையின் இணை அமைச்சர் நமோ நாராயண் மீனாவிடம் வழங்கினார்.இவ்வங்கி, டிவிடெண்டு வினியோக வரியாக, மத்திய அரசுக்கு, 58.78 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது.இந்தியன் வங்கி, சென்ற நிதியாண்டில், 1,747 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 2.60 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மொத்த வணிகம் புரிய இலக்கு நிர்ணயித்துள்ளதாக, இவ்வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|