பதிவு செய்த நாள்
17 ஜூலை2012
23:50
புதுடில்லி: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ.,) ரூபா# அடிப்படையிலான குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டியை உயர்த்தியுள்ளது. இதன்படி, 3-5 ஆண்டுகள் வரையில் மேற்கொள்ளப்படும், 15 லட்ச ரூபாய் வரையிலான டெபாசிட்டிற்கான வட்டி, 8.75 சதவீதத்தில் இருந்து, 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வங்கி, 15 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையில் மேற்கொள்ளப்படும் குறித்த கால டெபாசிட்டிற்கு, ஒரே சீராக, 9 சதவீத வட்டி வழங்குகிறது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் மேற்கொள்ளும், டெபாசிட்டிற்கு, காலாண்டிற்கு ஒரு முறை வட்டி வழங்கப்படுகிறது. இதில், இந்திய ரூபாயில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். அதே சமயம், அசல் மற்றும் வட்டியை அன்னியச் செலாவணியில் மட்டுமே பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|