அலைபேசி பண பரிமாற்றம் ஐந்து மடங்கு வளர்ச்சி அலைபேசி பண பரிமாற்றம் ஐந்து மடங்கு வளர்ச்சி ... இந்தியா,சீனாவின் மந்தநிலையால்... உலக பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாக குறையும் இந்தியா,சீனாவின் மந்தநிலையால்... உலக பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாக ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கடந்த வேளாண் பருவத்தில் சாதனை... நாட்டின் தானிய உற்பத்தி 25.74 கோடி டன்னாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2012
23:50

புதுடில்லி: கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த வேளாண் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, சாதனை அளவாக, 25.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என, மத்திய அரசின் நான்காவது மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஏப்ரல் மாத மதிப்பீட்டை விட, 50 லட்சம் டன் அதிகமாகும்.@வளாண் அமைச்Œகம்மத்திய வேளாண் அமைச்சகம், நேற்று தானிய உற்பத்தி குறித்த, நான்காவது மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வேளாண் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட, மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் நாட்டின் தானிய உற்பத்தி, 25.25 கோடி டன்னாக இருக்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த, 2010-11ம் வேளாண் பருவத்தில், தானிய உற்பத்தி, 24.48 கோடி டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நெல் உற்பத்திஅண்மையில் முடிவுற்ற வேளாண் பருவத்தில், நாட்டின் நெல் உற்பத்தி, 10.43 கோடி டன்னாக உள்ளது என, நான்காவது மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மூன்றாவது மதிப்பீட்டில், 10.34 கோடி டன்னாக இருக்குமென மதிப்பிடப்பட்டிருந்தது. கடந்த, 2010-11ம் பருவத்தில், நாட்டின் நெல் உற்பத்தி, 9.60 கோடி டன்னாக இருந்தது. கோதுமை உற்பத்தியும், மூன்றாவது மதிப்பீட்டை விட, நான்காவது மதிப்பீட்டில், 40 லட்சம் டன் அதிகரித்து, 9.39 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கடந்த 2010-11ம் பருவத்தில், கோதுமை உற்பத்தி, 8.69 கோடி டன்னாக இருந்தது.சென்ற வேளாண் பருவத்தில், பருப்பு வகைகள் உற்பத்தி, மூன்றாவது மதிப்பீட்டை விட, 2 லட்சம் டன் அதிகரித்து, 1.72 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. ஆனால், இது, கடந்த 2010-11ம் வேளாண் பருவத்தின், பருப்பு வகைகள் உற்பத்தியை விட, 10.03 லட்சம் டன் குறைவாகும்.இதர தானியங்கள் உற்பத்தி, மூன்றாவது மதிப்பீட்டில், 4.19 கோடி டன்னாக இருக்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது, நான்காவது மதிப்பீட்டில், 4.20 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயம், கடந்த 2010-11ம் வேளாண் பருவத்தில், இதர தானியங்கள் உற்பத்தி, 4.37 கோடி டன்னாக உயர்ந்து காணப்பட்டது.நாட்டின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, மூன்றாவது மதிப்பீட்டை விட, நான்காவது மதிப்பீட்டில், 50 ஆயிரம் டன் அதிகரித்து, 3 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. ஆனால், 2010-11ம் வேளாண் பருவத்தில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 3.25 கோடி டன்னாக இருந்தது.பருத்தி உற்பத்தி, சென்ற வேளாண் பருவத்தில், 3.52 கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) அதிகரித்துள்ளது என, நான்காவது மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த வேளாண் பருவத்தில், 3.30 கோடி பொதிகளாக இருந்தது.கரும்புகடந்த 2011-12ம் வேளாண் பருவத்தில், நாட்டின் கரும்பு உற்பத்தி, நான்காவது மதிப்பீட்டில், 60 லட்சம் டன் அதிகரித்து, 35.77 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த வேளாண் பருவத்தில், 34.22 கோடி டன்னாக இருந்தது என, புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)