பதிவு செய்த நாள்
17 ஜூலை2012
23:52
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்கிழமையன்று மிகவும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. தொடக்கத்தில், பங்கு வர்த்தகம் சூடுபிடித்திருந்த நிலையில், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது.நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், "சென்செக்ஸ்' சற்று உயர்ந்தும், "நிப்டி' சரிவுடனும் முடிவடைந்தது.அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு திட்டங்களை அறிவிக்கும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருட்கள், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 1.99 புள்ளிகள் உயர்ந்து, 17,105.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,236.08 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,074.63 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 4.40 புள்ளிகள் சரிவடைந்து, 5,192.85 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,236.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,181.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|