பதிவு செய்த நாள்
18 ஜூலை2012
10:26
கோட்டயம்:பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள், வரும் 25ம் தேதி முதல் இரண்டு நாட்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.இதுதொடர்பாக, வங்கிகள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் அமைப்பாளர் ஏ.சி.ஜோசப், நேற்று கூறியதாவது: கிராமப்புறங்களில் செயல்படும் வங்கிக் கிளைகளை மூடுவதை நிறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வங்கி சேவைகளைத் துவக்க, உரிமம் வழங்குவது என்ற முடிவை ரத்து செய்ய வேண்டும். வங்கிகளின் பங்குதாரர்களுக்கு உள்ள ஓட்டுரிமையை அதிகரிக்க, சட்டம் கொண்டு வரும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச் 26ம் தேதி, இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் அரசு நிர்வாகத்தினரிடம் மனு அளித்தோம்.அத்துடன், ஜூன் 18ம் தேதி மற்றொரு வேண்டுகோள் கடிதத்தையும் அனுப்பினோம். ஜூன் 27 மற்றும் ஜூலை 10ம் தேதிகளில், எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டமும் நடத்தினோம். இருந்தும், மத்திய அரசும், இந்திய வங்கிகள் சங்கமும், எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25ம் தேதி முதல் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தில், பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள் உட்பட, ஊழியர்கள் 10 லட்சம் பேர் பங்கேற்பர்.இவ்வாறு ஜோசப் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|