தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு ... நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.774 கோடியாக வளர்ச்சி நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.774 கோடியாக வளர்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணவீக்கம்: ரிசர்வ் வங்கி முரண்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2012
00:06

புதுடில்லி:பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு மட்டும் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க இயலாது என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் பணவீக்கம் 7.25 சதவீதமாக குறைந்துள்ளது. இதையடுத்து, நடப்பு ஜூலை மாதம் 31ம் தேதி, ரிசர்வ் வங்கி அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான "ரெப்போ' விகிதங்களை குறைக்கும் என பலதரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து சுப்பாராவ் கூறியதாவது:நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளதை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனை கவனத்தில் கொள்ளாமல், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பொதுப் பண வீக் கத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைப்பது சாத்தியமில்லை. இவ் வாறு சுப்பாராவ் கூறினார்.
அதே சமயம், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவருமான சி.ரங்க ராஜன்,பணவீக்கத்தில்,குறிப்பாக, உணவு சாரா தயாரிப்பு பொருட்களின் விலை குறைந்து வருவதால்,ரிசர்வ்வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என, அண்மையில் தெரிவித்திருந்தார். ஆக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்குமா அல்லது கடந்த முறை (ஜூன் 18) போன்று அப்படியே விட்டு விடுமா என்பது, வரும் 31ம் தேதி தெரிந்துவிடும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)