பதிவு செய்த நாள்
19 ஜூலை2012
00:06
புதுடில்லி:பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு மட்டும் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க இயலாது என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் பணவீக்கம் 7.25 சதவீதமாக குறைந்துள்ளது. இதையடுத்து, நடப்பு ஜூலை மாதம் 31ம் தேதி, ரிசர்வ் வங்கி அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான "ரெப்போ' விகிதங்களை குறைக்கும் என பலதரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து சுப்பாராவ் கூறியதாவது:நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளதை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனை கவனத்தில் கொள்ளாமல், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பொதுப் பண வீக் கத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை குறைப்பது சாத்தியமில்லை. இவ் வாறு சுப்பாராவ் கூறினார்.
அதே சமயம், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவருமான சி.ரங்க ராஜன்,பணவீக்கத்தில்,குறிப்பாக, உணவு சாரா தயாரிப்பு பொருட்களின் விலை குறைந்து வருவதால்,ரிசர்வ்வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என, அண்மையில் தெரிவித்திருந்தார். ஆக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்குமா அல்லது கடந்த முறை (ஜூன் 18) போன்று அப்படியே விட்டு விடுமா என்பது, வரும் 31ம் தேதி தெரிந்துவிடும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|