தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு ... சில்லரை பணவீக்கம்10.02 சதவீதமாக குறைவு சில்லரை பணவீக்கம்10.02 சதவீதமாக குறைவு ...
நறுமண பொருட்கள் ஏற்றுமதி ரூ.774 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2012
00:09

கொச்சி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, 774 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 564 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, மதிப்பின் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், நறுமண பொருட்கள் ஏற்றுமதி, 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
புள்ளி விவரம்:இதே மாதங்களில், அளவின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 49 சதவீதம் வளர்ச்சிகண்டு, 39,396 டன்னிலிருந்து, 58,685 டன்னாக அதிகரித்துள்ளது என, நறுமணப் பொருட்கள் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 5.66 லட்சம் டன் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி மூலம், 8,204 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில், 1,200 டன் மிளகு ஏற்றுமதியானது. இதன் மதிப்பு, 44.74 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இதன் ஏற்றுமதி, 2,266 டன் என்றளவிலும், இதன் மதிப்பு, 54.87 கோடி ரூபாயாகவும் இருந்தது.
ஏலக்காய்:ஆக, சென்ற ஏப்ரல் மாதத்தில், இதன் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 18 சதவீதம் என்றளவிலும், அளவின் அடிப்படையில், 47 சதவீதம் என்றளவிலும் குறைந்துள்ளது.இதே மாதங்களில், சிறிய ஏலக்காய் ஏற்றுமதி 120 டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 9.98 கோடி ரூபாயாகும். பெரிய ஏலக்காய் ஏற்றுமதி, 100 டன்னாகவும், இதன் மதிப்பு, 6.57 கோடி ரூபாயாகவும் இருந்தது.
மிளகாய்:மிளகாய் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் மாதத்தை விட, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், அளவின் அடிப்படையில், 131 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 96 சதவீதம் அதிகரித்து முறையே, 30 ஆயிரம் டன் மற்றும் 231 கோடி ரூபாயாகவும் இருந்தது.இஞ்சி ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 3 சதவீதம் வளர்ச்சிகண்டு, 2,500 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 15 சதவீதம் குறைந்து, 17.75 கோடி ரூபாயாகவும் இருந்தது.
மஞ்சள்: மஞ்சள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 1 சதவீதம் உயர்ந்து, 7,300 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 15 சதவீதம் குறைந்து, 41.25 கோடி ரூபாயாகவும் இருந்தது.கணக்கீட்டு மாதங்களில், தனியா ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 67 சதவீதம் வளர்ச்சிகண்டு, 2,600 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 65 சதவீதம் உயர்ந்து, 14.30 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
வெந்தயம்:வெந்தயம் ஏற்றுமதி அளவின் அடிப்படையில், 23 சதவீதம் உயர்ந்து, 875 டன்னாகவும்,மதிப்பின் அடிப் படையில் 1 சதவீதம் உயர்ந்து, 7.07 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.பூண்டு ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 133 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,250 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 23 சதவீதம் அதிகரித்து, 3.12 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கரிமசாலா தூள் :கரிமசாலா தூள்ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 19 சதவீதம் அதிகரித்து, 1,250 டன்னாகவும், மதிப்பின் அடிப் படையில், 22 சதவீதம் வளர்ச்சிகண்டு, 16.49 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. நறுமண எண்ணெய் மற்றும் ஓலியோரெசின் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 23 சதவீதம் அதிகரித்து, 600 டன்னாகவும், மதிப்பின் அடிப் படையில், 44 சதவீதம் அதிகரித்து, 97.50 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
புதினா:புதினா ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 11 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,000 டன்னாகவும், மதிப்பின் அடிப் படையில், 90 சதவீதம் அதிகரித்து, 198 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது என, நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள் ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)